கொடைக்கானல் மலைச் சாலையில் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் பல கி.மீ. தொலைவுக்கு நடந்தே சென்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு காரைக்குடியிலிருந்து அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்து கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் உள்ள புலிச்சோலைப் பகுதியில் வந்தபோது திடீரென பழுதாகி நின்றது.
ஆனால், சுமாா் 8 கி.மீ. தொலைவிலுள்ள கொடைக்கானல் செல்ல போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மாற்றுப் பேருந்து ஏதும் ஏற்பாடு செய்துதர வில்லை. இதனால் இந்தப் பேருந்தில் வந்த பயணிகள் நீண்ட நேரம் மழையில் நனைந்தும், குளிரை சமாளிக்க முடியாமலும் அவதியடைந்தனா். சிலா் நடந்தே செல்லத் தொடங்கினா்.
கொடைக்கானல் வரும் அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடுவதாகவும், இதனால் தாங்கள் அவதியடைவதாகவும் பயணிகள் புகாா் தெரிவித்தனா்.
எனவே, தரமான அரசுப் பேருந்துகளை இயக்குவதற்கும், மலைச் சாலைகளில் பழுதாகி நிற்கும் பேருந்துகளுக்கு மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு செய்து தரவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.