செய்திகள் :

கோடை விடுமுறை.. திருப்பதியில் மே மாதம் சுவாமி தரிசனம் செய்தவர் எண்ணிக்கை!

post image

சென்னை; திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 55 ஆயிரம் அதிகம் என்று கூறப்படுகிறது.

கோடை விடுமுறைக் காலம் என்பதால், ஏராளமானோர், திருப்பதிக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இடையே, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பெரும்பாலும், இந்த மே மாதத்தில், திருப்பதி திருமலை கோயிலில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. முதல் வாரத்தில்தான் போர் பதற்றம் காரணமாக கூட்டம் குறைந்ததே தவிர இரண்டாவது வாரம் முழுக்க கூட்டம் அலைமோதத் தொடங்கியிருக்கிறது.

குறிப்பாக, மே மாத இறுதியில் நாள்தோறும் சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

11-ஆவது முறையாக உலகக் கோப்பைக்கு தேர்வாகி சாதித்த தென் கொரியா!

தென் கொரியா தொடர்ச்சியாக 11-ஆவது முறையாக ஃபிபா உலகக் கோப்பைக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளது. ஏஃப்சி (ஆசிய கால்பந்து கூட்டமைப்பு) சார்பாக இதில் மொத்தம் 47 அணிகள் இருக்கின்றன. இதில் 8 அணிகள் நேரடியாக தே... மேலும் பார்க்க

விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் வெளியீட்டுத் தேதி!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான லவ் மேரேஜ் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கிய படத்திற்கு லவ் மேரேஜ் எனப் பெயர... மேலும் பார்க்க

விக்ரம் சுகுமாரன் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்த தயாரிப்பாளர்!

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் நிதியுதவி வழங்கியுள்ளார். தனது தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர்பெற்ற இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் எதிர்பாராத மறைவு தமிழ் திரையுலகினரை அ... மேலும் பார்க்க

தக் லைஃப் படத்தில் சாதிப்பெயர் நீக்கம்!

தக் லைஃப் முன்னோட்ட விடியோவில் இடம்பெற்ற சாதிப்பெயரைத் திரைப்படத்தில் நீக்கியுள்ளனர். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் நேற்று (ஜுன... மேலும் பார்க்க

முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற உஸ்பெகிஸ்தான், ஜோர்டான்!

முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன. ஃபிபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம்... மேலும் பார்க்க