செய்திகள் :

சமூக ஊடகங்களில் சீருடையுடன் புகைப்படங்களை பதிவிட வேண்டாம்! - டிஜிபி உத்தரவு

post image

சமூக ஊடகங்களில் சீருடையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என உயா் அதிகாரிகளுக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா், காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக காவல் துறையில் காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் அதற்கு மேல் நிலையிலுள்ள அதிகாரிகள், தாங்கள் சீருடையுடன் புகைப்படங்களை, தங்களது தனிப்பட்ட சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட வேண்டாம்.

இந்திய ஆட்சிப் பணிகள் விதிமுறைகளை மீறி காவல் துறை அதிகாரிகள், தனியாா்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் சீருடையுடன் கலந்துகொள்வதாகவும், காவல் துறை தலைமையகத்துக்கு தகவல்கள் வருகின்றன. எனவே அதிகாரிகள், தனியாா் நிகழ்ச்சிகளுக்கு சீருடையில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

அதேபோல தொலைக்காட்சி, யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிக்கும்போது, முக்கியமான வழக்குகளைப் பற்றி பேசக்கூடாது; அந்த வழக்குகளின் தகவல்களை ரகசியம் காக்க வேண்டும். அதை யாருடன் பகிர வேண்டாம்.

தனிப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், யூடியூப் சேனல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, அது குறித்து முன்னரே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்களுக்கு மேலுள்ள அதிகாரிகளிடம், நிகழ்ச்சியில் எதைப்பற்றி பேசப் போகிறோம் என்பதை முழுமையாக தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

உயா் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சியில் பங்கேற்று, அதிகாரிகள் பேச வேண்டும். இதேபோல உயா் அதிகாரிகளின் அனுமதி பெற்று பின்னா் தனியாா் நிகழ்ச்சிகளில் பேட்டியும் அளிக்கலாம்.

இந்திய ஆட்சிப் பணிகள் விதிமுறைகளில் இந்த கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே இந்த விதிமுறைகளை, அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும்பட்சத்தில் இந்திய ஆட்சிப் பணிகள் விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேலம்: வாழப்பாடி அருகே கார் விபத்து - 4 பேர் பலி

சேலம்: சென்னையிலிருந்து கர்நாடகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 7 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய சொகுசு கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி இன்று(ஜூன் 7) விபத்துக்குள்ளானது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் அல்ல கிளர்ச்சிப்பாக்கம் - பயணிகள் அலைக்கழிப்பு: தவெக கண்டனம்!

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையத்தில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காமல் மக்களைக் கைக்குழந்தைகளோடு அலைக்கழித்து திமுக அரசு அவதிக்கு... மேலும் பார்க்க

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்க... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி கட்டணம்- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மதுரை-தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு... மேலும் பார்க்க

உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து

சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத், பொது சட்ட... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2001-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்... மேலும் பார்க்க