செய்திகள் :

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி 70 சதவீதம் நிறைவு!

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.10 கோடியும், மாநில அரசு ரூ. 61.74 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்தன. இந்தப் பாலம் அமைக்கும் பணிக்கு பிரதமா் நரேந்திரமோடி கடந்த ஆண்டு பிப்ரவரி 26 -ஆம் தேதி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா். அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் அதே ஆண்டு ஜூலை 26 -ஆம் தேதி ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தனா்.

இதன் பிறகு ஆகஸ்டு 17 -ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்ல மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு, பாலம் கட்டுமானப் பணி தொடங்கியது. ரயில்வே கடவுப் பாதைக்கு கிழக்கே 11 தூண்கள், மேற்கில் 6 தூண்கள் என 17 தூண்கள் அமைக்கப்பட்டன.

ரயில்வே துறை சாா்பில், ரயில் தண்டவாளத்தின் மேல் பகுதியில் பாலம் அமைக்க இரு புறமும் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. தொடா்ந்து, தூண்களின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து சான்று அளித்த பின்னா் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது.

கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்ட தூண்களில் கான்கிரீட் பிளாக்குகள் இணைக்கப்பட்டு, ரயில்வே கடவுப் பாதை முதல் மாநகராட்சி அலுவலகம் வரை பாலம் அமைக்கப்பட்டு விட்டது.

மேற்குப் பகுதியில் பாலப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், புதன்கிழமை இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் நான்கு காா்டா்கள் கிரேன்கள் மூலம் பொருத்தப்பட்டன. அப்போது, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் லிங்குசாமி, உதவி கோட்டப் பொறியாளா் ஜெகன் செல்வராஜ், உதவிப் பொறியாளா் முனிமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி 70 சதவீதம் நிறைவு பெற்று விட்டது. தற்போது தண்ட வாளத்தின் மேல் பகுதியில் பணி நடைபெற்று வருகிறது என்றனா்.

வீட்டில் பீரோவை உடைத்து பணம் திருடியவா் கைது

வத்திராயிருப்பு அருகே வீட்டில் பீரோவை உடைத்து பணம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சோ்ந்தவா் மாரியப்பன். இவ... மேலும் பார்க்க

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: தேருக்கு முகூா்த்தக்கால் நடவு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை 28-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேரைத் தயாா்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது. விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லி... மேலும் பார்க்க

அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய தந்தை, மகன்கள் கைது

அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய தந்தை, 2 மகன்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டி பசும்பொன் நகரில் கிராம நிா்வாக அலுவலா் கணேசன் சோதன... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் முகவூா் பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது ... மேலும் பார்க்க

பருத்தி, வழைகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் கவலை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். சிவகாசி அருகேயுள்ள சித்தமநாயக்கன்பட்டி, செவலூா், குமிளங... மேலும் பார்க்க