செய்திகள் :

'சாதியப் பிரச்னைகளை படமாக எடுக்கக் கூடாது' - நயினார் நாகேந்திரன்

post image

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கோவை வரவுள்ளார். அவருக்கு கொடிசியா அரங்கில் பாராட்டு விழா நடத்துகிறோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

நயினார் நாகேந்திரன்

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தமிழரை துணை ஜனாதிபதியாக்கிய பெருமை பாஜகவுக்கு உள்ளது. டெல்டா மாவட்டத்தின் சொந்தக்காரர் என தமிழக முதலமைச்சர் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார். உண்மையில் டெல்டா மீது அக்கறையில்லாமல் செயல்படுகிறார்.

12 லட்சம் ஹெக்டேர் நீரில் மூழ்கியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல்லை வைத்து பராமரிக்க முடியாத அவல நிலை உள்ளது. திமுகவினர் உண்மையைப் பேசுவதில்லை. பருவ மழைக்கு முன்பாகவே மத்திய அரசு ரூ. 950 கோடி நிதி கொடுத்துள்ளனர். எங்குமே மழை முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறவில்லை.

டெல்டா விவசாயம்

தேர்தல் அறிக்கையில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. வெகுஜன  மக்களின் விரோத அரசாக உள்ளது. வெகு விரைவில் இந்த அரசு வீட்டுக்குச் செல்லும் காலம் வரும். சட்டமன்றத்தில் கேட்கும் கேள்விக்கும், பதிலுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது.

எனக்கு பைசல் பண்ணத்தான் தெரியும். பைசன் படம் தெரியாது. ஜாதி ரீதியான பிரச்னைகளை படமாக எடுப்பது சரியில்லை. விஜய் எங்கள் கூட்டணிக்கு வருகிறாரா என்பதை அவரிடம் கேட்க  வேண்டும். தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. ஆனால், தமிழக அரசு  செய்த சாதனை ரூ.890 கோடிக்கு மது விற்பனை செய்தது மட்டும்தான்.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக்

கடந்தாண்டை விட ரூ.150 கோடிக்கு விற்பனை அதிகம் என்பதுதான் இந்த அரசின் சாதனை. விரைவில் இது மாற்றி அமைக்கப்படும். பிஎம் ஶ்ரீ திட்டத்தில் கேரள அரசு சேருவது, மக்கள் நலனில் அந்த அரசு அக்கறையுடன் இருப்பதைக் காட்டுகிறது. “ என்றார்.

திண்டுக்கல்: சிதிலமடைந்த பாலம்; அச்சுறுத்தும் பள்ளம்... அலட்சிய அதிகாரிகளால் மக்கள் கவலை!

திண்டுக்கல் மாவட்டம், தோட்டனுத்து கிராமத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய சிமெண்ட் சாலையுடன் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டது. தற்போது அந்த வாய்க்கால் இணையும் பாலத்தில் பெரிய பள்ளம் ஒன்று உரு... மேலும் பார்க்க

கே.பாப்பாரப்பட்டி: `இந்த ரோட்டுல நடந்து வர்றதே நாளும் போராட்டமா இருக்கு!' - சாலை வசதி கோரும் மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட கே.பாப்பாரப்பட்டி கிராமத்தின் கொல்லக்கொட்டாய் பகுதியில் உள்ள தார்ச்சாலை மிகவும் சேதமடைந்து தார் எழும்பி குண்டும் குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது.... மேலும் பார்க்க

``சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு'' - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் கடந்த ஆகஸ்ட்டில் தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரி ரிப்பன் மாளிகைக்கு வெளியே இரண்டு வாரம் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.13 நாள்களாகப் போராட்டக்காரர்களை அலட்சியப்ப... மேலும் பார்க்க

`2.5 மில்லியன் இந்தியர்களின் பெருமூச்சு' - கஃபாலா சட்டத்தை ரத்து செய்த சவூதி இளவரசர்!

வெளிநாட்டு மோகம்விரைவில் பணக்காரனாக வேண்டும், கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக 1970, 80, 90-களில் வெளிநாட்டுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.குறிப்பாக வளைகுடா நாடுகளான ... மேலும் பார்க்க

ரூ.13,000 கோடி கடன் மோசடி: வைர வியாபாரி மெஹுல் சோக்சிக்காக சகல வசதியுடன் தயாராக இருக்கும் சிறை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திரும்ப கொடுக்காமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர் வெவ்வேறு நாடுக... மேலும் பார்க்க

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு‌ அமெரிக்கா தடை: பாதிக்கும் ரிலையன்ஸ்; இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி'இனி இந்தியா மெல்ல மெல்ல ரஷ்ய எண்ணெய் வாங்குவதைத் குறைக்கும்' - இது கடந்த இரண்டு - மூன்று நாள்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கும் ஒன்று.இன்னொரு பக... மேலும் பார்க்க