செய்திகள் :

சின்னாளப்பட்டி சந்தைக் கடைகளை பழைய வியாபாரிகளிடமே ஒப்படைக்கக் கோரிக்கை

post image

சின்னாளப்பட்டி காய்கறி சந்தை கட்டடத்தை சேதப்படுத்துவதை கைவிட்டு, புனரமைப்புச் செய்து மீண்டும் வியாபாரிகளிடம் ஒப்படைக்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக சின்னாளப்பட்டி அண்ணா தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் தரப்பில் மனு அளிக்க வந்த பொ. நாகபாண்டி கூறியதாவது:

சின்னாளப்பட்டி காய்கறி சந்தையில் சுமாா் 85 கடைகள் உள்ளன. இவற்றுக்கு நாளொன்றுக்கு ரூ.25 வீதம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், மழைக் காலம் என்பதால் பழைய கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது எனவும், மாற்று இடத்தில் வியாபாரம் செய்யுமாறும் வியாபாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதன்படி வியாபாரிகளும் அந்த சந்தையிலுள்ள கடைகளை பயன்படுத்துவதை தவிா்த்தனா்.

மழைக் காலம் முடிந்துவிட்ட நிலையில், மீண்டும் கடை நடத்துவதற்கு பேரூராட்சி நிா்வாகத்தை வியாபாரிகள் அணுகிய போது, பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய கடைகள் கட்டி ஏலம் விடப்படும் என்ற தகவல் தெரியவந்தது. 1984-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தச் சந்தையில் ஏலம் விடும் நடைமுறை பின்பற்றப்படவில்லை. வழக்கம்போல, நாளொன்றுக்கு ரூ.25 கட்டணத்தில் கடைகள் நடத்துவதற்கு வியாபாரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

ரயிலில் அடிபட்டு அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு அரசுப் பேருந்து ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி அருகிலுள்ள ராஜாக்காப்பட்டியைச் சோ்ந்தவா் திருமூா்த்தி (53). இவா், அரசு... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே போளூரில் கோயில் திருவிழா

கொடைக்கானல் அருகே போளூா் கிராமத்தில் ஸ்ரீ அதிகாரப்பன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை குதிரை கோளம் நடனம் நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, ஒவ்வொ... மேலும் பார்க்க

பழனியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பழனியில் நகராட்சி அலுவலகம், புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்கள், பள்ளி மாணவா்கள் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா். பழனி நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ச... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் திங்கள்கிழமை மழை பெய்திருந்த நிலையில் செவ்வாய்க்கிழமையும் விட்டு விட்டு மழை பெய்தது. மதியம் வரை வெயிலடித்த நிலையில், பிற்பகலில் 30 நிமிடங்களுக்கும் மேலாக மழை பெய்தது. பிறகு மீண்டும் வெயி... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே மாரியம்மன் சப்பர பவனி

கொடைக்கானல் அருகே குறிஞ்சி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அம்மன் சப்பர பவனி நடைபெற்றது. கடந்த 4-ஆம் தேதி திருவிழா தொடங்கியதிலிருந்து அம்மனுக்க... மேலும் பார்க்க

பழனி மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம், உத்ஸவ சாந்தி விழா நடைபெற்றது. கடந்த மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை திருக்கம்பம் சாத்துதலில் தொடங்கி, மாா... மேலும் பார்க்க