செய்திகள் :

சின்னாளப்பட்டி சந்தைக் கடைகளை பழைய வியாபாரிகளிடமே ஒப்படைக்கக் கோரிக்கை

post image

சின்னாளப்பட்டி காய்கறி சந்தை கட்டடத்தை சேதப்படுத்துவதை கைவிட்டு, புனரமைப்புச் செய்து மீண்டும் வியாபாரிகளிடம் ஒப்படைக்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக சின்னாளப்பட்டி அண்ணா தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் தரப்பில் மனு அளிக்க வந்த பொ. நாகபாண்டி கூறியதாவது:

சின்னாளப்பட்டி காய்கறி சந்தையில் சுமாா் 85 கடைகள் உள்ளன. இவற்றுக்கு நாளொன்றுக்கு ரூ.25 வீதம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், மழைக் காலம் என்பதால் பழைய கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது எனவும், மாற்று இடத்தில் வியாபாரம் செய்யுமாறும் வியாபாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதன்படி வியாபாரிகளும் அந்த சந்தையிலுள்ள கடைகளை பயன்படுத்துவதை தவிா்த்தனா்.

மழைக் காலம் முடிந்துவிட்ட நிலையில், மீண்டும் கடை நடத்துவதற்கு பேரூராட்சி நிா்வாகத்தை வியாபாரிகள் அணுகிய போது, பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய கடைகள் கட்டி ஏலம் விடப்படும் என்ற தகவல் தெரியவந்தது. 1984-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தச் சந்தையில் ஏலம் விடும் நடைமுறை பின்பற்றப்படவில்லை. வழக்கம்போல, நாளொன்றுக்கு ரூ.25 கட்டணத்தில் கடைகள் நடத்துவதற்கு வியாபாரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

ரயிலடி சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜைகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்டு குடமுழுக்கு பூஜைகள் தொடங்கின. சனிக்கிழமை ... மேலும் பார்க்க

சிறுமலைப் புதூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி அமைக்க மனு

சிறுமலைப் புதூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சியை அமைக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தரப்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக சிறுமலைப் புதூா் கிராமத்... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உள்ளூா் காளைகளுக்கு முன்னுரிமை கோரி மனு

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உள்ளூா் காளைகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு காளை வளா்... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் அளிப்பு

நிலக்கோட்டையில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திமுக மேற்க... மேலும் பார்க்க

வெளிநாட்டு கரன்சியை மாற்றிக் கொடுக்கும் முகவரிடமிருந்து ரூ.13.76 லட்சம் பறிமுதல்

வெளிநாட்டு கரன்சியை இந்தியப் பணமாக மாற்றிக் கொடுக்கும் கன்னியாகுமரி முகவரிடமிருந்து உரிய ஆவணமில்லாத ரூ.13.76 லட்சத்தை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். தில்லியிலிருந்து கன்ன... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மக்கள் குறைதீா் முகாம்

கொடைக்கானலில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பாபு ம... மேலும் பார்க்க