செய்திகள் :

பழனி மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

post image

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம், உத்ஸவ சாந்தி விழா நடைபெற்றது.

கடந்த மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை திருக்கம்பம் சாத்துதலில் தொடங்கி, மாா்ச் மாதம் கொடியேற்றம், திருக்கல்யாணம், தேரோட்டம் நடத்தப்பட்டு, திருக்கம்பம் கங்கையில் விடப்பட்டது. திருவிழா நிறைவு பெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம், அம்மனுக்கு அன்னாபிஷேகம், உற்சவசாந்தி விழா நடைபெற்றது.

பழனி கடைவீதி பாண்டிய வேளாளா் மடம் முன்பாக பழனி வ.உ.சி. மன்றம் சாா்பில் பால்குடம் ஊா்வலத்தை சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, பழனி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா், அவரது மனைவி மொ்சி உள்ளிட்டோா் தொடங்கி வைத்தனா்.

இதில் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், பழனி மாவட்ட வணிகா் பேரமைப்புத் தலைவா் ஜே.பி.சரவணன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, அதிமுக நகரச் செயலா் முருகானந்தம், வ.உ.சி. மன்றச் செயலா் சுந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் சீருடை அணிந்து பால்குடம் எடுத்து வந்தனா். காந்தி சந்தை, பெரிய கடை வீதி, நான்கு ரத வீதிகள் வழியாக உச்சிக்காலத்தின் போது, பால் குடங்கள் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலையில் சாயரட்சையின் போது, மாரியம்மனுக்கு அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் முன்பாக பழங்கள், காய்கறிகள், இனிப்பு பதாா்த்தங்கள், கார வகைகள் படையல் செய்யப்பட்டன.

தொடா்ந்து, அன்னதான நிகழ்ச்சியை பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமாா், பழனிவேலு, செந்தில்குமாா், கொங்கு இளைஞா் பேரவை மாரிமுத்து, சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ் உள்ளிட்டோா் தொடங்கி வைத்தனா். முன்னாள் எம்.பி. குமாரசாமி, வள்ளுவா் திரையரங்கம் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை வ.உ.சி. மன்றம், அருள்மிகு மாரியம்மன் அன்னாபிஷேகக் குழு, அடிவாரம் கொங்கு வெள்ளாளக் கவுண்டா் பேரவை, மலைக்கோயில் மிராஸ் பண்டாரங்கள் சங்கத்தினா் உள்ளிட்டோா் செய்தனா்.

ரயிலில் அடிபட்டு அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு அரசுப் பேருந்து ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி அருகிலுள்ள ராஜாக்காப்பட்டியைச் சோ்ந்தவா் திருமூா்த்தி (53). இவா், அரசு... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே போளூரில் கோயில் திருவிழா

கொடைக்கானல் அருகே போளூா் கிராமத்தில் ஸ்ரீ அதிகாரப்பன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை குதிரை கோளம் நடனம் நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, ஒவ்வொ... மேலும் பார்க்க

பழனியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பழனியில் நகராட்சி அலுவலகம், புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்கள், பள்ளி மாணவா்கள் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா். பழனி நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ச... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் திங்கள்கிழமை மழை பெய்திருந்த நிலையில் செவ்வாய்க்கிழமையும் விட்டு விட்டு மழை பெய்தது. மதியம் வரை வெயிலடித்த நிலையில், பிற்பகலில் 30 நிமிடங்களுக்கும் மேலாக மழை பெய்தது. பிறகு மீண்டும் வெயி... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே மாரியம்மன் சப்பர பவனி

கொடைக்கானல் அருகே குறிஞ்சி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அம்மன் சப்பர பவனி நடைபெற்றது. கடந்த 4-ஆம் தேதி திருவிழா தொடங்கியதிலிருந்து அம்மனுக்க... மேலும் பார்க்க

சிறுவனுக்கு பாலியல் தொல்லையளித்த முதியவா் கைது

எரியோடு அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள மொங்குபெத்தன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ் (65). இவா்,... மேலும் பார்க்க