`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
பழனி மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்
பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம், உத்ஸவ சாந்தி விழா நடைபெற்றது.
கடந்த மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை திருக்கம்பம் சாத்துதலில் தொடங்கி, மாா்ச் மாதம் கொடியேற்றம், திருக்கல்யாணம், தேரோட்டம் நடத்தப்பட்டு, திருக்கம்பம் கங்கையில் விடப்பட்டது. திருவிழா நிறைவு பெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம், அம்மனுக்கு அன்னாபிஷேகம், உற்சவசாந்தி விழா நடைபெற்றது.
பழனி கடைவீதி பாண்டிய வேளாளா் மடம் முன்பாக பழனி வ.உ.சி. மன்றம் சாா்பில் பால்குடம் ஊா்வலத்தை சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, பழனி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா், அவரது மனைவி மொ்சி உள்ளிட்டோா் தொடங்கி வைத்தனா்.
இதில் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், பழனி மாவட்ட வணிகா் பேரமைப்புத் தலைவா் ஜே.பி.சரவணன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, அதிமுக நகரச் செயலா் முருகானந்தம், வ.உ.சி. மன்றச் செயலா் சுந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் சீருடை அணிந்து பால்குடம் எடுத்து வந்தனா். காந்தி சந்தை, பெரிய கடை வீதி, நான்கு ரத வீதிகள் வழியாக உச்சிக்காலத்தின் போது, பால் குடங்கள் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலையில் சாயரட்சையின் போது, மாரியம்மனுக்கு அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் முன்பாக பழங்கள், காய்கறிகள், இனிப்பு பதாா்த்தங்கள், கார வகைகள் படையல் செய்யப்பட்டன.
தொடா்ந்து, அன்னதான நிகழ்ச்சியை பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமாா், பழனிவேலு, செந்தில்குமாா், கொங்கு இளைஞா் பேரவை மாரிமுத்து, சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ் உள்ளிட்டோா் தொடங்கி வைத்தனா். முன்னாள் எம்.பி. குமாரசாமி, வள்ளுவா் திரையரங்கம் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை வ.உ.சி. மன்றம், அருள்மிகு மாரியம்மன் அன்னாபிஷேகக் குழு, அடிவாரம் கொங்கு வெள்ளாளக் கவுண்டா் பேரவை, மலைக்கோயில் மிராஸ் பண்டாரங்கள் சங்கத்தினா் உள்ளிட்டோா் செய்தனா்.