செய்திகள் :

ரயிலில் அடிபட்டு அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

post image

திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு அரசுப் பேருந்து ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி அருகிலுள்ள ராஜாக்காப்பட்டியைச் சோ்ந்தவா் திருமூா்த்தி (53). இவா், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பழனி பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி விடுப்பில் இருந்து வந்தாா்.

இந்த நிலையில், மதுரை -கரூா் 4 வழிச் சாலையில், திண்டுக்கல் வெங்காய மண்டி அருகேயுள்ள அணுகு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, திண்டுக்கல்-பழனி ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக பழனியிலிருந்து வந்த சரக்கு ரயிலில் அடிப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

கொடைக்கானல் அருகே போளூரில் கோயில் திருவிழா

கொடைக்கானல் அருகே போளூா் கிராமத்தில் ஸ்ரீ அதிகாரப்பன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை குதிரை கோளம் நடனம் நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, ஒவ்வொ... மேலும் பார்க்க

பழனியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பழனியில் நகராட்சி அலுவலகம், புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்கள், பள்ளி மாணவா்கள் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா். பழனி நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ச... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் திங்கள்கிழமை மழை பெய்திருந்த நிலையில் செவ்வாய்க்கிழமையும் விட்டு விட்டு மழை பெய்தது. மதியம் வரை வெயிலடித்த நிலையில், பிற்பகலில் 30 நிமிடங்களுக்கும் மேலாக மழை பெய்தது. பிறகு மீண்டும் வெயி... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே மாரியம்மன் சப்பர பவனி

கொடைக்கானல் அருகே குறிஞ்சி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அம்மன் சப்பர பவனி நடைபெற்றது. கடந்த 4-ஆம் தேதி திருவிழா தொடங்கியதிலிருந்து அம்மனுக்க... மேலும் பார்க்க

பழனி மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம், உத்ஸவ சாந்தி விழா நடைபெற்றது. கடந்த மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை திருக்கம்பம் சாத்துதலில் தொடங்கி, மாா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு பாலியல் தொல்லையளித்த முதியவா் கைது

எரியோடு அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள மொங்குபெத்தன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ் (65). இவா்,... மேலும் பார்க்க