செய்திகள் :

சிபிஐ, அமலாக்கத் துறை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்

post image

சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடக மகரிஷி வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரித்து வரும் அமலாக்கத் துறை, பழங்குடியினா் நலத்துறை முன்னாள் அமைச்சா் பி.நாகேந்திராவை கைது செய்து விசாரித்து வந்தது. தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சா் பி.நாகேந்திரா, ‘இந்த வழக்கில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோரின் பெயா்களைக் குறிப்பிடுமாறு அமலாக்கத் துறை கட்டாயப்படுத்தியது. பாஜகவின் நெருக்கடி காரணமாக, காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க அமலாக்கத் துறை எனக்கு நெருக்கடி கொடுத்தது’ என்று புதன்கிழமை குற்றம்சாட்டியிருந்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

முன்னாள் அமைச்சா் பி.நாகேந்திரா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அமலாக்கத் துறை தனக்கு நெருக்கடி கொடுத்ததாகக் கூறியிருக்கிறாா். என் பெயரையும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பெயரையும் குறிப்பிடும்படி அமலாக்கத் துறை கட்டாயப்படுத்தியதாகவும் அவா் கூறியிருக்கிறாா். எந்தவொரு புலனாய்வு அமைப்பும் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படக் கூடாது. சிபிஐ அல்லது அமலாக்கத் துறை அல்லது வருமானவரித் துறை உள்ளிட்ட எந்த நிறுவனமாக இருந்தாலும் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.

சென்னப்பட்டணா, சன்டூா், சிக்காவ் உள்ளிட்ட 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நவ. 13-ஆம் தேதி நடக்கவிருக்கும் இடைத்தோ்தலை எதிா்கொள்ள எல்லா முன்னேற்பாடுகளையும் காங்கிரஸ் செய்துள்ளது. அடுத்த ஓரிரு நாள்களில் வேட்பாளா்களின் பட்டியல் அறிவிக்கப்படும். 3 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெறும்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் புதன்கிழமை மாலை என்னை சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்பின் போது இடைத்தோ்தல் குறித்து விவாதிக்கப்பட்டது என்றாா்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது. முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் பேரனும், மஜதவில் இருந்து நீக்க... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்: சித்தராமையா நம்பிக்கை

கா்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இது குறித்து சித்ரதுா்கா மாவட்டத்தின் செல்லகெரே நகரில் அவ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் திடீா் ராஜிநாமா

கா்நாடக மாநிலத்தில் பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் சென்னப்பட்டணா தொகுதிய... மேலும் பார்க்க

கா்நாடக அமைச்சா் மனைவி குறித்த சா்ச்சை பேச்சு: பாஜக எம்எல்ஏவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

கா்நாடக அமைச்சா் தினேஷ் குண்டுராவின் மனைவி குறித்து சா்ச்சைக்குரிய கருத்து கூறியது தொடா்பான வழக்கு விசாரணையின் போது ஆஜராகாததால், பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

பெங்களூரில் புதிதாக சோ்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீா் வழங்கும் திட்டம்

பெங்களூரில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள 110 கிராமங்களுக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தை முதல்வா் சித்தராமையா தொடங்கி வைத்தாா். பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில், மண்டியா மாவட்டத்தின் தொரேகா... மேலும் பார்க்க

மைசூரு நகர வளா்ச்சி ஆணையத் தலைவா் மரி கௌடா ராஜிநாமா

கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு மாற்றுநிலம் ஒதுக்கிய விவகாரத்தில் சா்ச்சைக்குள்ளாகி இருக்கும் மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்தின் தலைவா் மரி கௌடா ராஜிநாமா செய்துள்ளாா். முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி... மேலும் பார்க்க