செய்திகள் :

சிறுத்தை, புலியுடன் நேரில் சண்டையிட்டு தப்பிப் பிழைத்த இருவர்... மருத்துவமனையில் சிகிச்சை

post image

வனப்பகுதிக்கு அருகில் வசித்தால் சிறுத்தை, புலி போன்ற வன விலங்குகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். அத்துடன், குடியிருப்பு பகுதிக்குள் வந்து நாய், ஆடு, மாடுகளை இழுத்துச் செல்வதும் வழக்கம்.

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் அருகில் உள்ள தொண்டாலி என்ற கிராமத்தில் வசிப்பவர் ஆசிஷ் மகாஜன்(55). இவர் தனது வீட்டில் ஆசையாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

நேற்று இரவு இவர்கள் குடும்பத்தினர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென நாய் குரைத்தது. சத்தம் கேட்டு உடனே ஆசிஷ் வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தார். அங்கு நாயை நோக்கி ஒரு சிறுத்தை சென்று கொண்டிருந்தது. ஆசிஷை பார்த்ததும் சிறுத்தை அவரை தாக்க வந்தது.

அதற்குள் உறங்கிக் கொண்டிருந்த ஆசிஷ் மனைவியும் எழுந்து ஓடிவந்தார். அவர் சிறுத்தையை பார்த்ததும் வீட்டிற்குள் சென்று உள்ளே இருந்த ஈட்டி ஒன்றை எடுத்து வந்து தனது கணவனிடம் கொடுத்தார். ஈட்டியின் துணையோடு ஆசிஷ் சிறுத்தை மீது பாய்ந்து 15 நிமிடம் சண்டையிட்டார். இதில் ஆசிஷ் ஈட்டியால் சிறுத்தையின் கழுத்து, மார்பு பகுதியில் குத்தினார். சண்டையில் ஆசிஷ்க்கும், சிறுத்தைக்கும் படுகாயம் ஏற்பட்டது.

மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். சிறுத்தை சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனது. ஆனால் ஆசிஷ் தப்பித்துக்கொண்டார். அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். வனத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் சென்றனர். பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இறந்தது இரண்டு வயது பெண் சிறுத்தையாகும்.

புலியை தாக்கி ஹீரோவானவர்

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூரில் நந்த்காவ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோவர்தன் டாங்கே(42). இவர் தனது தோட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அவர் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சியபோது அங்கு ஒரு புலி வந்தது. அந்த புலி டாங்கே மீது பாய்ந்து தாக்கியது.

டாங்கே

டாங்கேயும் பயப்படாமல் 10 நிமிடம் புலியுடன் சேர்ந்து போராடினார். கடைசியில் தனது கிணற்றுக்குள் டாங்கே இறங்கி தனது உயிரை பாதுகாத்துக் கொண்டார்.

புலி சம்பவ இடத்தில் இருந்து சென்றுவிட்டது. டாங்கே முகம் முழுவதும் புலியின் நக காயங்கள் இருந்தது. புலியை எதிர்த்து போராடி உயிரோடு வந்த அவரை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

தேனி: சிப்பிபாறை டு ராட்வில்லர்; கண்காட்சியில் வரிசைகட்டிய பல வகை நாய்கள் - முதலிடம் பிடித்த கோம்பை!

தேனி அருகே தப்புகுண்டுவில் உள்ள தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாய் பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் நாய் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக காவ... மேலும் பார்க்க

வண்டிப்பெரியாறு: அச்சுறுத்திய புலி மீது துப்பாக்கிச்சூடு; வனத்துறை மீதான குற்றச்சாட்டும் விளக்கமும்!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் என்பது அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது. அதில் கரடி, புலி, காட்டெருமை, காட்டு யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் ... மேலும் பார்க்க

``காட்டுமாட்டை மீட்க இரக்கமின்றி பேரம் பேசினார்கள்..." - வனத்துறையை சாடும் மக்கள்; என்ன நடந்தது?

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி வனக்கோட்டத்தில் காடுகளை இழந்து தவிக்கும் காட்டு மாடுகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி விளை நிலங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் பரிதவித்து வருகின்றன. அதிலும் குற... மேலும் பார்க்க

இனப்பெருக்கத்திற்குப் பிறகு பெண் ஆக்டோபஸ்கள் இறந்துவிடுமா? - octopus குறித்த ஆச்சர்ய தகவல்கள்!

ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியில் இருந்து ஆக்டோபஸ்கள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. கடலின் ஆழத்தில் உள்ள பவளப்பாறைகளில் வாழ்ந்து வருகின்றன. ஆழ்கடலில் இருக்கும் ஆக்டோபஸ்கள் குறித்த ஆச்சர்ய தகவல்களை தெரிந... மேலும் பார்க்க

குடியாத்தம்: தேனீக்கள் கொட்டி ஒருவர் மரணம்; 12 பேருக்கு தீவிர சிகிச்சை... என்ன நடந்தது?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்துள்ள சின்ன பரவக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பால மூர்த்தி மகன் செந்தில்குமார் (40). இவர், பெங்களூரில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி ஏரியாவில் வெல்டிங் கடை நடத்தி வந்தார்... மேலும் பார்க்க