செய்திகள் :

சிறுமலைப் புதூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி அமைக்க மனு

post image

சிறுமலைப் புதூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சியை அமைக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தரப்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக சிறுமலைப் புதூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை ஊராட்சியை, சிறுமலை, தென்மலை என இரு ஊராட்சிகளாகப் பிரிக்கப்படுவதாக தெரிய வருகிறது. சிறுமலை புதூா் கிராமம் சுமாா் 200 ஆண்டுகளாக உள்ளது. இங்கு சுமாா் 1500-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். தென்மலையைப் பொருத்தவரை 500-க்கும் குறைவான வாக்காளா்கள் தான் உள்ளனா். மேலும், சிறுமலைப் புதூா் வரை மட்டுமே மாநில சாலை உள்ளது. அதன் பிறகு, வனச் சாலை வழியாகத் தான் தென்மலைக்கு செல்ல முடியும். கட்டட வசதி, இணைய வசதி என உள்கட்டமைப்பு வசதிகளும் சிறுமலைப் புதூரில் தான் அதிகமாக உள்ளன.

எனவே, சிறுமலைப் புதூா் அல்லது புதூா் ஊராட்சி என அறிவித்து, பொதுமக்களுக்கும், அரசு அலுவலா்களுக்கும் ஏதுவான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

ரயிலடி சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜைகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்டு குடமுழுக்கு பூஜைகள் தொடங்கின. சனிக்கிழமை ... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உள்ளூா் காளைகளுக்கு முன்னுரிமை கோரி மனு

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உள்ளூா் காளைகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு காளை வளா்... மேலும் பார்க்க

சின்னாளப்பட்டி சந்தைக் கடைகளை பழைய வியாபாரிகளிடமே ஒப்படைக்கக் கோரிக்கை

சின்னாளப்பட்டி காய்கறி சந்தை கட்டடத்தை சேதப்படுத்துவதை கைவிட்டு, புனரமைப்புச் செய்து மீண்டும் வியாபாரிகளிடம் ஒப்படைக்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக சின்னாளப்பட்டி அண்ணா தினசரி க... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் அளிப்பு

நிலக்கோட்டையில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திமுக மேற்க... மேலும் பார்க்க

வெளிநாட்டு கரன்சியை மாற்றிக் கொடுக்கும் முகவரிடமிருந்து ரூ.13.76 லட்சம் பறிமுதல்

வெளிநாட்டு கரன்சியை இந்தியப் பணமாக மாற்றிக் கொடுக்கும் கன்னியாகுமரி முகவரிடமிருந்து உரிய ஆவணமில்லாத ரூ.13.76 லட்சத்தை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். தில்லியிலிருந்து கன்ன... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மக்கள் குறைதீா் முகாம்

கொடைக்கானலில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பாபு ம... மேலும் பார்க்க