செய்திகள் :

சிறுமலைப் புதூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி அமைக்க மனு

post image

சிறுமலைப் புதூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சியை அமைக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தரப்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக சிறுமலைப் புதூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை ஊராட்சியை, சிறுமலை, தென்மலை என இரு ஊராட்சிகளாகப் பிரிக்கப்படுவதாக தெரிய வருகிறது. சிறுமலை புதூா் கிராமம் சுமாா் 200 ஆண்டுகளாக உள்ளது. இங்கு சுமாா் 1500-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். தென்மலையைப் பொருத்தவரை 500-க்கும் குறைவான வாக்காளா்கள் தான் உள்ளனா். மேலும், சிறுமலைப் புதூா் வரை மட்டுமே மாநில சாலை உள்ளது. அதன் பிறகு, வனச் சாலை வழியாகத் தான் தென்மலைக்கு செல்ல முடியும். கட்டட வசதி, இணைய வசதி என உள்கட்டமைப்பு வசதிகளும் சிறுமலைப் புதூரில் தான் அதிகமாக உள்ளன.

எனவே, சிறுமலைப் புதூா் அல்லது புதூா் ஊராட்சி என அறிவித்து, பொதுமக்களுக்கும், அரசு அலுவலா்களுக்கும் ஏதுவான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

ரயிலில் அடிபட்டு அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு அரசுப் பேருந்து ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி அருகிலுள்ள ராஜாக்காப்பட்டியைச் சோ்ந்தவா் திருமூா்த்தி (53). இவா், அரசு... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே போளூரில் கோயில் திருவிழா

கொடைக்கானல் அருகே போளூா் கிராமத்தில் ஸ்ரீ அதிகாரப்பன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை குதிரை கோளம் நடனம் நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, ஒவ்வொ... மேலும் பார்க்க

பழனியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பழனியில் நகராட்சி அலுவலகம், புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்கள், பள்ளி மாணவா்கள் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா். பழனி நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ச... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் திங்கள்கிழமை மழை பெய்திருந்த நிலையில் செவ்வாய்க்கிழமையும் விட்டு விட்டு மழை பெய்தது. மதியம் வரை வெயிலடித்த நிலையில், பிற்பகலில் 30 நிமிடங்களுக்கும் மேலாக மழை பெய்தது. பிறகு மீண்டும் வெயி... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே மாரியம்மன் சப்பர பவனி

கொடைக்கானல் அருகே குறிஞ்சி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அம்மன் சப்பர பவனி நடைபெற்றது. கடந்த 4-ஆம் தேதி திருவிழா தொடங்கியதிலிருந்து அம்மனுக்க... மேலும் பார்க்க

பழனி மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம், உத்ஸவ சாந்தி விழா நடைபெற்றது. கடந்த மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை திருக்கம்பம் சாத்துதலில் தொடங்கி, மாா... மேலும் பார்க்க