செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போலீஸ் அலட்சியம்? - அதிரடி உத்தரவிட்ட கோர்ட்... மும்பையில் கைதான நபர்!

post image

துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தலைமறைவாகி இருந்த தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த பாஜக முன்னாள் நிர்வாகி நீலகண்டனை மும்பையில் வைத்து ஆலங்குளம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலியல் தொல்லை

தென்காசி மாவட்டம், சுரண்டையைச் சேர்ந்த நீலகண்டன் என்பவர் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தில் மேலாளராகவும், அதேசமயம் பாஜக செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2023 ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள குடும்ப நண்பரின் வீட்டிற்கு சென்ற அவர், அங்கு நண்பரின் மகள் 15 வயது சிறுமி தனியாக இருந்துள்ளார். அப்போது நீலகண்டன், சிறுமி மட்டும் தனியாக இருந்ததை பயன்படுத்திக்கொண்டு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். முற்றிலும் பயந்துபோன அந்தச் சிறுமி, அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓட முயன்றுள்ளார். அப்போது இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று தன்னிடமிருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

எனினும் சிறுமி தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த துன்புறுத்தலை கூறியதையடுத்து, அவர்கள் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை மேற்கொள்ளாமல் புகாரை கிடப்பில் போட்டதால், நீண்ட காலம் வழக்குபதிவு செய்யப்படாமல் இருந்தது. இதனால் வேதனையடைந்த சிறுமியின் பெற்றோர் விரைவாக நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி எஸ்பி-யிடம் மனு அளித்தனர். அதன் பின்னரும் வழக்குப்பதிவு செய்யப்படாததால் மதுரை உயர் நீதிமன்ற கிளையை நாடி மனுத்தாக்கல் செய்தனர். விசாரணை மேற்கொண்ட நீதிபதி உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் நீலகண்டன் மீது கடந்த மாதம் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து தன்னைப் போலீசார் தேடி வருவதை அறிந்த நீலகண்டன் தலைமறைவாகினார். தனிப்படை அமைத்த காவல்துறையினர் தொழில்நுட்ப உதவிகளுடன் நீலகண்டன் மும்பைக்குத் தப்பிச் சென்றதை கண்டுபிடித்தனர். பின்னர் ஆலங்குளம் தனிப்படை போலீசார் மும்பை சென்று அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் தென்காசி எஸ்பி எஸ். அரவிந்த் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நீலகண்டனை கைது செய்ய உத்தரவிட்டார்.

நாமக்கல் மூதாட்டி கொடூர கொலை... மர்ம நபர்களைப் பிடிக்க எட்டு தனிப்படைகள்; காவல்துறை என்ன சொல்கிறது?

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சித்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சாமியாத்தாள்(67). இவரது கணவர் இறந்து விட்டார். வீட்டின் அருகில் உள்ள சொந்தத் தோட்டத்தில் விவசாயம் செய்து தனியாக வசித்து வருகிறார்.ச... மேலும் பார்க்க

Meghalaya Husband Murder: "நகையுடன் வரச் சொன்னார்" - குடும்பத்தினர் சந்தேகம்; மனைவி கைதானது எப்படி?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவர் தனது மனைவியுடன் கடந்த மாதம் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றனர்.அவர்கள் சிரபுஞ்சிக்குச் சென்றபோது கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்ட... மேலும் பார்க்க

இளம்பெண் பாலியல் புகார்... புதுச்சேரிக்கு தப்பிஓடிய ஆம்பூர் அர்ச்சகர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (40). இவர் அங்குள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான ஒரு திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார். இந்த நிலையில், தியாகராஜன் மீது திருமணமாகாத 2... மேலும் பார்க்க

`உன்னை ராணிபோல பார்த்துக்கொள்கிறேன்’ - பெண் ஊழியரிடம் அத்துமீறினாரா சுகாதாரத்துறை அதிகாரி?

திருப்பத்தூர் மாவட்டம், மான்கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த பெண் (வயது 39). இவர், திருப்பத்தூரில் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், திருப்பத்தூர் மாவ... மேலும் பார்க்க

சிறுவனை சிகரெட் பிடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது; 2 போலீஸார் சஸ்பெண்ட்.. நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், `102 ரெட்டியூர்’ கிராமத்தில், 9 வயது சிறுவன் சிகரெட் புகைப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. விசாரணையின்போது, அந்த வீடியோ கடந... மேலும் பார்க்க

நெல்லை: `சாமக்கொடையில் மண்டையோடு, எலும்புடன் சாமி ஆட்டம்..' பரவிய வீடியோ - 5 பேர் மீது வழக்கு பதிவு

நள்ளிரவில் நடக்கும் சாமக் கொடையின்போது மயானத்துக்குச் சென்று திரும்பிய சாமியாடிகள் மனித எலும்புகளை கையில் ஏந்தியபடி வந்து சாமியாடிய விவகாரம் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.நெல்லை மாவட்டம் வீரவநல... மேலும் பார்க்க