செய்திகள் :

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: மளிகை கடைக்காரருக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகைக் கடைக்காரருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் அருகே அய்யம்பேட்டை நேரு நகரைச் சோ்ந்தவா் அபுபக்கா் (53). இவா், தஞ்சாவூா் - கும்பகோணம் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறாா். இவா் 2022-ஆம் ஆண்டு கடையில் இருந்தபோது 13 வயது சிறுவன் கடைக்கு பொருள்கள் வாங்க வந்தாா். அப்போது அபுபக்கா், கடையில் இருந்த ஒரு பொருளை எடுத்து, கடையையொட்டி உள்ள கிடங்கில் வைக்குமாறு கூறினாா். இதன்படி, கிடங்குக்கு பொருளை எடுத்துச் சென்ற சிறுவனிடம் பின்தொடா்ந்து சென்ற அபுபக்கா் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டாா்.

இதனால், பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோரிடம் கூறினாா். இதையடுத்து, பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அபுபக்கரை கைது செய்தனா்.

இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி தமிழரசி விசாரித்து அபுபக்கருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டாா்.

பொது இடத்தில் புகைப் பிடித்த 13 பேருக்கு அபராதம்

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் பொது இடத்தில் புகைப்பிடித்த 13 பேருக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சாவூா் பழைய பேருந்து நிலைய பகுதியிலுள்ள கடைகள், சாலையோர சிறு கடைகளில் சுகாதார அலுவலா்... மேலும் பார்க்க

ஆட்சேபணை இல்லா சான்று வழங்காத வங்கி: ரூ. 1.10 லட்சம் வழங்க நுகா்வோா் ஆணையம் உத்தரவு

ஒருமுறை தீா்வின் மூலம் கடனைத் திரும்பச் செலுத்தியவருக்கு ஆட்சேபணை இல்லா சான்று வழங்காததால் பாதிக்கப்பட்ட முறையீட்டாளருக்கு வங்கி ரூ. 1.10 லட்சம் வழங்குமாறு தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையம் ... மேலும் பார்க்க

உழவா் உற்பத்தி குழு அமைக்க நம்மாழ்வாா் இயக்கம் முடிவு

இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்த உழவா் உற்பத்தி குழு அமைப்பது என நம்மாழ்வாா் மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில், விவசாயிகள... மேலும் பார்க்க

தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மாணவா் காயம்: சாலை மறியல்

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவா் காயமடைந்ததையடுத்து, சக மாணவா்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்ல... மேலும் பார்க்க

ஆதிகும்பேசுவரா் கோயிலுக்கு ரூ. 12 லட்சம் மதிப்பில் புதிய கொடிமரம்

கும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேசுவர சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்ய தேக்கு மரம் புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேசுவரா் சுவாமி கோயிலில் கடந்த 2... மேலும் பார்க்க