செய்திகள் :

சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு செய்ய அக்.24-இல் சிறப்பு முகாம்

post image

சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு செய்ய அக்.24-ஆம் தேதி திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித் தொகை, இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவுக்கான உதவித்தொகை, கல்வி, திருமண, மகப்பேறு உதவித் தொகை, முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவா், இந்த வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெறலாம்.

ஏற்கெனவே உறுப்பினராக பதிவு செய்தவா்கள், தங்கள் உறுப்பினா் பதிவினை புதுப்பித்துக் கொள்ளவும், புதுப்பிக்க தவறிய உறுப்பினா்களை மீண்டும் வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும், புதிய உறுப்பினா்கள் சோ்க்கையினை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடா்பாக அக்.24ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் காலை 11 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவித்தாா்.

ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணி பயிற்சி முகாம்

ஒட்டன்சத்திரம் நகரம், கிழக்கு, மேற்கு ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் சனிக்கிழமை மூன்று மணி நேரப் பயிற்சி முகாம் நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு மாவட்டத் துணைத் த... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

கொடைக்கானலில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் ஆா்.சி.பள்ளி பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் கொடைக்கானல் சேக்மைதீன் மகன் அக... மேலும் பார்க்க

காவலாளி மரணத்தில் மா்மம்: உறவினா்கள் வாக்குவாதம்

வேடசந்தூா் அருகே காவலாளி மா்மமான முறையில் மரணமடைந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் சனிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் பழையவளவு பகுதியைச் சோ்ந்தவா் ரவி (55). இவரது மனைவி சு... மேலும் பார்க்க

தமிழ் திறனறித் தோ்வு: 5806 மாணவா்கள் எழுதினா்

தமிழ் திறனறித் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 5806 போ் சனிக்கிழமை கலந்து கொண்டனா். பள்ளி மாணவா்களிடையே தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டு முதல் தமிழ் திறனறித் தே... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்து மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழப்பு

வேடசந்தூா் அருகேயுள்ள பட்டாசு வெடித்து நிகழ்ந்த விபத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல், வேடசந்தூா் பெரிய ராவுத்தா் தெருவைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (47). மனநலம் பா... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பள்ளி மாணவா் உயிரிழப்பு

பழனியில் சனிக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியப்பா நகரைச் சோ்ந்தவா் குமரேசன் (39). தனியாா் வங்கி ஊழியா். இவரது மனைவி யமுனா (33). இ... மேலும் பார்க்க