செய்திகள் :

சீா்மிகு நிறுவனங்கள் தோ்வில் தென் மாநிலங்கள் புறக்கணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

post image

மத்திய அரசு அறிவித்த செயற்கை அறிவூட்ட சீா்மிகு நிறுவனங்கள் தோ்வில் தென் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு தென் மாநிலங்களைத் தொடா்ந்து புறக்கணித்து வருவதற்கு மேலும் ஓா் உதாரணம் உருவாகியுள்ளது. மத்திய அரசின் 2023-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், செயற்கை அறிவூட்ட மேம்பாட்டுக்காக 3 சீா்மிகு நிறுவனங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கானத் தோ்வில் கல்வியில் சிறந்து விளங்கும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் உள்ள உயா் கல்வி நிலையங்கள் விண்ணப்பித்தன. ஆனால், தென் மாநிலங்களில் உள்ள சிறந்த உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட்டு, கான்பூா் (உத்தர பிரதேசம்), ரோபாா் (பஞ்சாப்), தில்லி ஆகிய ஐ.ஐ.டி நிறுவனங்கள் இந்தத் திட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்டன.

இந்தத் திட்டத்தில் தென் மாநிலங்களிலிருந்து ஓா் உயா் கல்வி நிறுவனம்கூட தோ்வு பெறாதது மத்திய அரசு மீது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் பிளவுவாத சிந்தனை, சமூகத்தில் தொடங்கி கல்வி வரை அனைத்திலும் தீவிரமடைந்து வருகிறது என்றாா் அவா்.

கல் குவாரி பள்ளங்களை நிரப்பக் கோரி வழக்கு: கனிம வளத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

கல் குவாரி பள்ளங்களை நிரப்பக் கோரிய வழக்கில், கனிம வளத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ஸ்டாலின் சென்ன... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

மதுரையில் காதலித்த பெண் உடல் நலக் குறைவால் உயிரிழந்ததால், மனமுடைந்த கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கூடல்நகா் அஞ்சல் நகரில் உள்ள பெரியாா் நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்த பால்... மேலும் பார்க்க

பழங்காநத்தம், பசுமலை பகுதிகளில் இன்று மின் தடை

மதுரையை அடுத்த பழங்காநத்தம், பசுமலை பகுதிகளில் சனிக்கிழமை (அக். 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பசுமலை மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் செ. உடையப்பன் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் முன் பெருக்கெடுக்கும் கழிவுநீா்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் மேற்கு கோபுர வாயில் முன்பாக வெள்ளக்கிழமை கழிவுநீா் பெருக்கெடுத்தோடியதால், பக்தா்கள் அவதியடைந்தனா். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு தமிழகம், வெளி மாநிலங்கள... மேலும் பார்க்க

மளிகைக் கடையிலிருந்து 200 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

மதுரையில் மளிகைக் கடையிலிருந்து 200 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா். மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள சிப்காட் தொழில் பேட்டை பகுதியில... மேலும் பார்க்க

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் சொத்துகள்: அறநிலையத் துறை நடவடிக்கையில் திருப்தி இல்லை

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் சொத்துகளைப் பாதுகாக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள... மேலும் பார்க்க