செய்திகள் :

சென்னை ஐஐடியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை?; துணிச்சலுடன் போராடியதால் தப்பித்தார் - நடந்தது என்ன?

post image

சென்னை ஐஐடி-யில் 20 வயதான இளம்பெண் ஒருவர் Internship-க்கு வந்திருக்கிறார். இதற்காக அவர் ஐஐடி வளாகத்திலேயே தங்கியிருக்கிறார். கடந்த 25.6.2025-ம் தேதி இரவில் ஐஐடி வளாகத்தில் அவர் தனியாக நடந்துச் சென்றார். அப்போது கையில் கட்டை ஒன்றை வைத்திருந்த இளைஞர் ஒருவர், அந்த இளம்பெண்ணை வழிமறித்தார். என்ன நடக்கிறது என தெரியாமல் அந்த இளம் பெண் யோசிப்பதற்குள் இளைஞர், அவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்தார். வலியால் அவர் துடித்தபோது இளம்பெண்ணிடம் அத்துமீற அவர் முயன்றார்.

அதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், இளைஞரோடு போராடினார். பின்னர் இளைஞரின் பிடியிலிருந்து தப்பித்ததோடு செக்யூரிட்டிகளிடம் விவரத்தைக் கூறி சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்து வந்திருக்கிறார் இளம்பெண். ஆனால் அதற்குள் அந்த இளைஞர் தப்பிவிட்டார். இதையடுத்து ஐஐடி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை செக்யூரிட்டிகள் ஆய்வு செய்தனர். அதோடு இந்த நேரத்தில் ஐஐடி வளாகத்துக்குள் வெளிநபர்கள் வர வாய்ப்பில்லாததால் அங்கு வேலை செய்பவர்களே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என செக்யூரிட்டிகள் கருதினர்.

கைது
கைது

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட இளம்பெண், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இளம்பெண்ணிடமும் என்ன நடந்தது என பெண் போலீஸார் விசாரித்தனர். இளம்பெண் அளித்த தகவலின்படி விசாரித்ததில் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது ஐஐடி வளாகத்தில் செயல்படும் புட் கோர்ட் ஒன்றில் வேலை செய்யும் ரோஷன்குமார் (22) என்று தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது சம்பவத்தன்று உடல்நலம் சரியில்லை எனக் கூறி புட்கோர்ட் வேலைக்குச் செல்லாமல் விடுமுறையிலிருந்திருக்கிறார். பின்னர், இரவு 9 மணியளவில் ஐஐடி வளாகத்தில் தனியாக நடந்து வந்த இளம்பெண்ணுக்கு ரோஷன்குமார் பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கத்தில் செயல்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரோஷன்குமாரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `` இளைஞர் ரோஷன்குமாரின் தாக்குதலில் நிலைகுலைந்த இளம்பெண், தைரியமாக செயல்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தை மூடி மறைக்காமல் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தால்தான் ரோஷன்குமாரை கைது செய்ய முடிந்தது. ரோஷன் குமாரின் பின்னணியை விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விசாரணைக்குப்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளோம்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சட்டக் கல்லூரிக்குள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி - கொல்கத்தாவில் மீண்டும் அதிர்ச்சி

கொல்கத்தாவில் ஏற்கனவே கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் மேற்கு வங்க அரசியல் மட்டுமல்லாது நாடு முழுவ... மேலும் பார்க்க

தெலங்கானா: 'ரூ.500 முதல் ரூ.2000 வரை கட்டணம்' - தங்களுடைய ஆபாச வீடியோக்களை இணையத்தில் விற்ற தம்பதி

தெலங்கானாவில் வீட்டிலிருந்தபடி சட்டவிரோதமாக ஆபாசப் படங்களை உருவாக்கி, அதற்காக பணம் பெற்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட்டையில் வீட்டிலிருந்தே தம்பதிகள் ஆபாசப் படங்களை... மேலும் பார்க்க

3-வது மனைவியைக் கொன்று 23 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை.. 75 வயது முதியவர் சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் தனது மூன்றாவது மனைவியைக் கொன்றுவிட்டு 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 75 வயது முதியவரை போலீஸார் தற்போது கைது செய்திருக்கின்றனர்.போலீஸாரின் கூற்றின்படி, ஹனுமந்தப்பா எ... மேலும் பார்க்க

திருப்பூர்: 'இன்ஸ்டாகிராம் லின்க்கால் ரூ.22 லட்சம் போச்சு' - பறிகொடுத்த இளைஞர்; எச்சரிக்கும் போலீஸ்

திருப்பூரைச் சேர்ந்தவர் முனிவேலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதற்குள் சென்ற முனிவேல், அதில் இணைக்கப்பட்ட வாட்ஸ் ஆஃப் லிங்க் மூலம் குழுவில் இணைந... மேலும் பார்க்க

'கிளர்க் பணிக்கு ரூ.3 லட்சம்' - அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி; கல்லூரி பேராசிரியர் இடை நீக்கம்

திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பழைய வத்தலகுண்டைச் சேர்ந்த தனபால் என்பவரின் மனைவி ராஜேஸ்வரிக்கு திண்டுக்கல்... மேலும் பார்க்க

மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு - சென்னை சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை!

'இரு மதங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை பரப்பியதாக' மதுரை ஆதீனம் மீது சென்னை கிழக்கு மண்டல சைஃபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க