செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 2 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை
சென்னை: செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணிகாலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் 2 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள், அறிவிப்புகள், அரசின் சாதனைகள், செய்தி வெளியீடுகள், அறிக்கைகள், வேண்டுகோள்கள் அனைத்தும் மக்களை எளிதில் சென்றடையும் வகையில் அரும்பணிகளைத் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.
இந்த நிலையில், சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணிகாலத்தில் மறைந்த பணியாளர்களின் 2 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாகப் பணி நியமனம் செய்து பணி நியமன ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
இதையும் படிக்க |16 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்த எஸ்.அன்பழகன் அக்டோபர் 5 ஆம் தேதி திருநெல்வேலி அரசுப் பொருட்காட்சியில் பணியிலிருக்கும்போது இயற்கை எய்தினார். அவருடைய சட்டப்படியான வாரிசுதாரர்களில் ஒருவரான அவரது இளைய சகோதரர் எஸ்.குணாநிதி, சென்னை ராஜாஜி மண்டபம் (ம) காந்தி மண்டபத்தில் தேர்வு நிலை தோட்டப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த ஜி.வரலட்சுமி கடந்த ஜனவர் 1 ஆம் இயற்கை எய்தியதால், அவருடைய ஒரே மகனான டி.வி. பரமேஸ்வரராவுக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணி நியமனம் வழங்கி உரிய நியமன ஆணையை தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் வியாழக்கிழமை(அக் 24) வழங்கினார்.
பணி நியமன ஆணைகளைப் பெற்றுக் கொண்ட இருவரும் முதல்வர், செய்தித்துறை அமைச்சருக்கு தங்களுடைய குடும்பங்களின் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) மு.பெ.அன்புசோழன் மற்றும் கூடுதல் இயக்குநர் (செய்தி) ச.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.