செய்திகள் :

தவெக மாநாடு: பெரியார், காமராஜர் கட்-அவுட்!

post image

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டு திடல் முன்பு காமராஜர், பெரியார், நடிகர் விஜய் மற்றும் அம்பேத்கர் முழு உருவ 70 அடி உயர பிரம்மாண்டமான கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 85 ஏக்கா் பரப்பளவு கொண்ட இடத்தில் மாநாடும், சுமாா் 207 ஏக்கா் பரப்பளவில் வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டு, தவெக மாநாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பணிகளை வியாழக்கிழமைக்குள் (அக்டோபா் 24) ஒப்படைக்கும் வகையில், அனைத்துப் பணிகளையும் விரைவுபடுத்தி மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிக்க: வரும் ஞாயிறு(அக். 27) ரேஷன் கடைகள் இயங்கும்!

மாநாட்டு பந்தல் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 15 ஆயிரம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக வெற்றி கழகத்தினர் மாநாடு குறித்து விளம்பர படுத்த மாவட்ட காவல்துறை நிர்வாகத்திடம் அனுமதி கோரி இருந்தனர். அதற்கு காவல் துறையினர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் விக்கிரவாண்டி பகுதி தேசிய நெடுஞ்சாலைகளில் மாநாட்டு திடல் மற்றும் விக்கிரவாண்டியை சுற்றி விளம்பர பேனர்கள் மற்றும் 60 அடி உயரத்தில் ஹீலியம் கேஸ் நிரப்பப்பட்ட பலூன்களை பறக்கவிட்டு விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

வாக்காளர் அடையாள அட்டை திருத்த முகாம்!

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வதற்கான முகாம் குறித்த அறிவிப்பை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்டுள்ளார்.சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக தேசிய மற்றும் மாநில அரசிய... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழ... மேலும் பார்க்க

செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 2 வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை

சென்னை: செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணிகாலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் 2 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினார்.தமிழ்நாடு ... மேலும் பார்க்க

16 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவு... மேலும் பார்க்க

ஹேமந்த் சோரன் வேட்புமனு தாக்கல்!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. நவம்பர் 13 ஆம... மேலும் பார்க்க

திருமாவளவன் முதல்வராக வேண்டுமென்றால் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும்: கே. கிருஷ்ணசாமி

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, முதல்வர் வேட்பாளர் தொல்.திருமாவளவன் என்று கூறுவது பொருத்தமில்லாதது. திருமாவளவன் முதல்வராக வேண்டுமென்றால், அந்தக் கூட்டணியில் இருந்து விடுதலைச்சிறுத்தைகள் வெளியே வரவேண... மேலும் பார்க்க