செய்திகள் :

சொந்த ஊருக்கு வரும் துணை ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு; பாதுகாப்பு வளையத்துக்குள் திருப்பூர்

post image

குடியரசுத் துணைத் தலைவராக சி. பி. ராதாகிருஷ்ணன் அண்மையில் பொறுப்பேற்று கொண்டார். திருப்பூரை சொந்த ஊராகக் கொண்ட அவர், இன்று (அக்டோபர் 28) மற்றும் நாளை (அக்டோபர் 29) என இரண்டு நாட்கள் திருப்பூரில் தங்கி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

இதையொட்டி, மாநகரம் மற்றும் ஷெரீஃப் காலனியில் உள்ள அவரது வீடு, மேலும் அவர் செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒத்திகை
ஒத்திகை

கோவையிலிருந்து இன்று மாலை திருப்பூருக்கு வர இருக்கும் சி. பி. ராதாகிருஷ்ணன், திருப்பூரில் உள்ள திருப்பூர் குமரன் சிலை மற்றும் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

தொடர்ந்து ஷெரீஃப் காலனியில் உள்ள வீட்டில் தங்க இருக்கும் சி. பி. ராதாகிருஷ்ணன், புதன்கிழமை காலை திருப்பூர் சந்திராபுரத்தில் உள்ள கோயிலும், முத்தூர் அருகே உள்ள குலதெய்வக் கோயிலுக்கும் செல்கிறார். தொடர்ந்து வேலாயுதசாமி மண்டபத்தில் தொழில் முனைவோர்கள், விவசாயிகள் கலந்து கொள்ளும் பாராட்டு நிகழ்வில் பங்கேற்பார்.

பாதுகாப்பு பணியில்
பாதுகாப்பு பணியில்

இதையொட்டி பல்வேறு இடங்களிலும் நேற்று போலீஸார் மோப்பநாய் சோதனையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடத் தொடங்கினர். திருப்பூர் மாநகர் போலீஸார், சென்னை போலீஸார், சிஆர்பிஎஃப் ஆகியோர் சேர்ந்து சோதனை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

குடியரசுத் துணைத் தலைவர் வருகையையொட்டி, சுமார் ஆயிரம் போலீஸார் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசுத் துணைத் தலைவரான பின்பு முதல்முறையாக திருப்பூர் வருகையையொட்டி, பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்:

திருப்பூர் மாநகரில் 2 நாள்களும் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அவிநாசி வழியாக வரும் கனரக வாகனங்கள் திருமுருகன்பூண்டி வழியாக இடது புறம் திரும்பி பூலுவப்பட்டி வழியாக பி. என். ரோட்டை அடைந்து நகருக்குள் வர வேண்டும்.

தாராபுரம் சாலை வழியாக நகருக்குள் வரும் கனரக வாகனங்கள் கோவில் வழி, பெருந் தொழுவு, கூலிப்பாளையம் நாலு ரோடு வழியாக ஊத்துக்குளி சாலையை அடைந்து நகருக்குள் வரலாம்.

பாதுகாப்பு பணியில்
பாதுகாப்பு பணியில்

பல்லடம் சாலை செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் அனைத்தும் கோவில் வழி பேருந்து நிறுத்தம் வழியாக அய்யம்பாளையம் நாலு ரோடு, காளி குமாரசாமி கோவில் சாலையை அடைந்து வீரபாண்டி பிரிவு வழியாக பல்லடம் சாலையை அடைந்து நகருக்குள் வரலாம்.

இன்று குமரன் ரோடு, பார்க் ரோடு, மங்கலம் ரோடு, காமராஜர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்கள் பயண திட்டத்தை அதற்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்ள வேண்டும். நாளை தாராபுரம் ரோடு, மாநகராட்சி சந்திப்பு, காமராஜர் ரோடு, வேலாயுதசாமி திருமண மண்டபம், சந்திராபுரம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அதற்கு ஏற்ப தங்கள் பயண திட்டத்தை மாற்றி அமைத்து கொள்ளலாம் என மாநகர் போலீஸார் தெரிவித்துள்ளார்.

Delta விவசாயிகளின் கண்ணீர் கதை: நெல் கொள்முதலில் தோல்வியடைந்த ஸ்டாலின் அரசு | Ground Report

இந்த ஆண்டு வழக்கத்தைவிட டெல்டாவில் இரண்டு மடங்கு அதிகமாக குறுவை சாகுபடி நடந்துள்ளது. விவசாயிகள் எதிர்பார்த்ததைவிட நல்ல மகசூலும் கிடைத்தது. ஆனால், இதற்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய விவசாயிகள் துயரத்தி... மேலும் பார்க்க

"நாளைக்கு என்னாகும் தெரியாது" - பொடி வைத்த ஜோடங்கர் - காங்கிரஸ் கணக்கு என்ன?

விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் இல்லத் திருமண விழா, அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று(அக்.27-ம் தேதி) நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திமுக-வும் கா... மேலும் பார்க்க

புதுவை: பெண்களுக்கு Night Shift தடை: "பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என அரசு ஒப்புக்கொள்கிறதா?"- திமுக

பெண்களை இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்துவதற்குத் தடை விதித்து புதுச்சேரி தொழிலாளர் துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது. அதுகுறித்துப் பேசியிருக்கும் புதுச்சேரி தி... மேலும் பார்க்க

கோவையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா!

குடியரசு துணைத் தலைவரை வரவேற்ற தமிழக அமைச்சர்கள் குடியரசு துணைத் தலைவரை வரவேற்ற பொதுமக்கள்குடியரசு துணைத் தலைவரை வாழ்த்திய அதிமுகவை சேர்ந்த வேலுமணி குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்கோயம்புத்த... மேலும் பார்க்க

'தேர்தல் தோல்வி... பிரதமரிடம் இருந்து வந்த அழைப்பு..' - மனம் திறந்த சி.பி.ராதாகிருஷ்ணன்

சி.பி. ராதாகிருஷ்ணன் நாட்டின் குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று தமிழ்நாடு வந்தார். இன்று காலை கோவை வந்த அவருக்கு தொழில் அமைப்புகள் சார்பில் கொடிசியா அரங்கில் பாராட்டு விழா ந... மேலும் பார்க்க