செய்திகள் :

ஜம்மு - காஷ்மீர் ஆய்வுக் கூட்டம்: முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? ப. சிதம்பரம் கேள்வி

post image

ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் சட்டம் - ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டதை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மனோஜ் சின்ஹா தலைமையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீர் காவல் துறையின் மூத்த அதிகாரிகளும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ஆனால், சமீபத்தில் ஜம்மு - காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஒமர் அப்துல்லா அல்லது அமைச்சர்கள் யாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தலைமையில் சட்டம் - ஒழுங்கு சூழல் குறித்த மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? இல்லையா? என்பது தெரியவில்லை.

ஜம்மு - காஷ்மீருக்கு விதிக்கப்பட்டுள்ள சட்ட விதிமுறைகளின்படி, காவல்துறையானது ஆளுநரின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

மக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முதல்வரையும், அரசாங்கத்தையும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், முதல்வருக்கு அதிகாரம் இல்லை.

இதனால்தான், ஜம்மு - காஷ்மீரை முழுமையான மாநிலம் இல்லை எனக் கூறப்படுகிறது. ஜம்மு - காஷ்மீருக்கான முழு மாநில அந்தஸ்தை உடனடியாக மீட்டெடுப்பது இன்றியமையாதது ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : பிரியங்கா வேட்புமனு தாக்கலின் போது வெளியே அனுப்பப்பட்டாரா கார்கே?

பத்து ஆண்டுகளுக்கு பிறகு..

10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸின் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

கடந்த 16-ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர தேர்தலில் அஜித் பவார் அணிக்கு கடிகார சின்னம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியே கடிகார சின்னத்தைப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, ... மேலும் பார்க்க

85 விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியா முழுவதும் 85 விமானங்களுக்கு இன்று(அக். 24) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. இந்... மேலும் பார்க்க

இன்று ஒரே நாளில் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது நாள்தோறும் தொடர்கதையாகிவரும் நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

மன்னிப்பு கேட்பவர் பெரிய மனிதர்..! சல்மான் கானுக்கு பாடகர் அறிவுரை!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிஷ்னோய் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என பாடகர் அனுப் ஜலோடா கூறியுள்ளார். 1998 ராஜஸ்தானில் ஹம் சாத் சாத் ஹைன் படத்தின் படப்பிடிப்பின்போது பிஷ்னோய் சமூக மக்களின் ... மேலும் பார்க்க

தீபாவளி முதல் மூன்று இலவச சிலிண்டர்கள்: ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்

அமராவதி: ஆந்திர மாநில அரசு சார்பில், பயனாளர்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.இதையடுத்து, பயனாளர்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை இலவச... மேலும் பார்க்க

காரை நடுரோட்டில் விட்டுச் சென்ற மக்கள்! ஸ்தம்பித்துப்போன பெங்களூரு நகரம்!!

தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகர் பெங்களூரு கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலுக்கும் தலைநகராக மாறியிருப்பது, அங்கிருக்கும் அனைவருக்குமே துயரமான செய்திதான்.ஏற்கனவே போக்குவரத்து நெரிசலால் சிக்கித்... மேலும் பார்க்க