செய்திகள் :

ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12 இல் வெளியாகும்: நடிகர் ரஜினிகாந்த் தகல்

post image

ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

2023-இல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர். இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மீண்டும் நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வருகிறது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளத்தில் நடைபெற்றது. தற்போது, கடந்த ஒரு வாரமாக படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வந்தது.

கடந்த ஒரு வாரமாக கோவையில் நடைபெற்ற ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு புதன்கிழமை சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, சென்னை விமானத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ரஜினிகாந்த், ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகிப் பால்கே விருது பெற்றமைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜுன் 12 ஆம் தேதி ஜெயிலர் இரண்டாம் பாகம் வெளியாகும் என தெரிவித்த ரஜினிகாந்த் அங்கு கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து கைகளை அசைத்தவாறு காரில் ஏறிச் சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வரும் ஜெயிலர் இரண்டாம் பாகம் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அரசு கல்லூரிகளில் 881 கௌரவ விரிவுரையாளா்கள் நியமனம்: அமைச்சா் கோவி. செழியன்

Jailer Part 2 to release on June 12 says Actor Rajinikanth

உலகை நானே காப்பாற்றனுமா... டிரம்ப்பின் அடுத்த புலம்பல்!

நியூயார்க்: நான் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற ஏழு மாதங்களில் ஏழு போா்களை நிறுத்தியுள்ளதாக தொடர்ந்து புலம்பி வரும் டொனால்ட் டிரம்ப், உலக பிரச்னைகளை தீர்க்கும் என்னை பாராட்டி ஐ.நா. சபையிடமிருந்த... மேலும் பார்க்க

மன்னா் சரபோஜி பிறந்த நாள் விழா: அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை

மன்னர் சரபோஜியின் 248 ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தஞ்சாவூரை சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் என பல மன்னர்கள்... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு மக்கள் மீது கவலை இருந்திருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? : கே.என். நேரு

திருநெல்வேலி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மக்கள் மீதான கவலை இருந்திருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என அமைச்சர் கே.என். நேரு கேள்வி எழுப்பியுள்ளார். திருநெல்வேலியில் பசுமைத் தமிழ்... மேலும் பார்க்க

கலைமாமணி விருது பெறும் சதிராட்டக் கலைஞர் முத்துகண்ணம்மாள்!

விராலிமலை: விராலிமலை சேர்ந்த சதிர் கலைஞரான பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள் தமிழக அரசின் கலைமாமணி (பால சரசுவதி) விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விராலிமலையைச் சேர்ந்த 93 வயதான முத்து கண்ணம்மாள் இசை வேளாள... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை வினாடிக்கு 10,849 கனஅடியில் இருந்து வினாடிக்கு 9, 425 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வி... மேலும் பார்க்க

2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: முழுவிவரம்!

2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வ... மேலும் பார்க்க