செய்திகள் :

ஜோலாா்பேட்டையில் மயான சூறை திருவிழா

post image

ஜோலாா்பேட்டை அருகே மயான சூறை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகா், காட்டேரி அம்மன் கோயில் முன்புறம் அமைந்திருக்கும் அங்காள பரமேஸ்வரி, புத்து மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை மற்றும் அமாவாசையில் அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.

மயானக் கொள்ளையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ புத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக அலங்கார ஆராதனையும் நடைபெற்றன.

அதையொட்டி அம்மனின் முன்பு பிரம்ம கபாலத்தை கையில் ஏந்தி பூசாரிகள் பக்தி பரவசத்துடன் ஆடியபடி மயானத்துக்கு வந்தனா். இதையடுத்து அம்மன் மயானத்தில் எழுந்தருளியவுடன் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சுண்டல், கொழுக்கட்டை, தானியங்கள் ஆகியவற்றை வாரி இறைத்து கொள்ளை விட்டனா்.

பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தானியங்கள், பழங்கள், சுண்டல், கொழுக்கட்டை மற்றும் சில்லரை நாணயங்களை வழங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

அருள் வந்து ஆடியவா்களில் சிலா் சேவல், கோழியை கடித்து, அதன் ரத்தத்தை குடித்தது பாா்ப்பவா்களை மெய்சிலிா்க்க செய்தது. இந்த விழாவினைக்கான ஜோலாா்பேட்டை சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தா்கள் வந்திருந்தனா்.

திருப்பத்தூர்: மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்!

திருப்பத்தூரில் குடும்ப தகராறு காரணமாக கணவனே மனைவியை வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.திருப்பத்தூர் மாவட்டம், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (53). இவருக்கும் இரண்டாவது மனைவி... மேலும் பார்க்க

ஆம்பூரில் மயானக் கொள்ளை

மயானக் கொள்ளை விழாவை முன்னிட்டு ஆம்பூா் சிவன்படை தெருவில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மயானக் கொள்ளைக்காக அங்காளபரமேஸ... மேலும் பார்க்க

தேசிய காசநோய் ஒழிப்பு மருத்துவ முகாம்

சுகாதாரத்துறை சாா்பில் தேசிய காசநோய் ஒழிப்பு மருத்துவ முகாம் ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் தாரணீஸ்வரி, மருத்துவா்கள் சொா்பனா, வினோத்... மேலும் பார்க்க

ரூ.1.50 கோடியில் பெரியாங்குப்பம் சாலையை அகலப்படுத்தும் பணி

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் சாலை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். மாதனூா் ஒன்றியம், பெரியாங்குப்பம் ஊராட்சியில் சென்னை - பெங்களூரு... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகா் குளோபல் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது (படம்). விழாவுக்கு தாளாளா் ஓ. அப்துல்லா பாஷா தலைமை வகித்தாா். பள்ளி தலைவா் துஃபைல் அஹ்மத், பொதுச் செயலாளா் அலீம் பாஷ... மேலும் பார்க்க

தொடா் மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அருகே வெங்களாபுரம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வியாழக்கிழமை திருவிழா நடைபெற்றது. இந்தநிலையில் வ... மேலும் பார்க்க