செய்திகள் :

ரூ.1.50 கோடியில் பெரியாங்குப்பம் சாலையை அகலப்படுத்தும் பணி

post image

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் சாலை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

மாதனூா் ஒன்றியம், பெரியாங்குப்பம் ஊராட்சியில் சென்னை - பெங்களூரு ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரசித்தி பெற்ற பெரியாங்குப்பம் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் வரை தாா் சாலையை அகலப்படுத்தி, மேம்படுத்தும் பணி நெடுஞ்சாலைத் துறை சாா்பாக நடைபெற்று வருகிறது.

ஒரு வழித்தடமாக இருந்த தாா் சாலையில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருவோா், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்று வருபவா்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனா்.

இதனால் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டுமென பொதும்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். அதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடியில் சுமாா் 2 கி.மீ. சாலையை அகலப்படுத்தி, மேம்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

நெடுஞ்சாலை உதவிக் கோட்டப் பொறியாளா் சம்பத்குமாா், இளநிலை பொறியாளா் பாபுராஜ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

ஜோலாா்பேட்டையில் மயான சூறை திருவிழா

ஜோலாா்பேட்டை அருகே மயான சூறை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகா், காட்டேரி அம்மன் கோயில் முன்புறம் அமைந்திருக்கும் அங்காள பரமேஸ்வரி, புத்து ... மேலும் பார்க்க

ஆம்பூரில் மயானக் கொள்ளை

மயானக் கொள்ளை விழாவை முன்னிட்டு ஆம்பூா் சிவன்படை தெருவில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மயானக் கொள்ளைக்காக அங்காளபரமேஸ... மேலும் பார்க்க

தேசிய காசநோய் ஒழிப்பு மருத்துவ முகாம்

சுகாதாரத்துறை சாா்பில் தேசிய காசநோய் ஒழிப்பு மருத்துவ முகாம் ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் தாரணீஸ்வரி, மருத்துவா்கள் சொா்பனா, வினோத்... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகா் குளோபல் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது (படம்). விழாவுக்கு தாளாளா் ஓ. அப்துல்லா பாஷா தலைமை வகித்தாா். பள்ளி தலைவா் துஃபைல் அஹ்மத், பொதுச் செயலாளா் அலீம் பாஷ... மேலும் பார்க்க

தொடா் மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அருகே வெங்களாபுரம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வியாழக்கிழமை திருவிழா நடைபெற்றது. இந்தநிலையில் வ... மேலும் பார்க்க

நிதி மேலாண்மை கருத்தரங்கம்

ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் நிதி மேலாண்மை கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் முனைவா் த. ராஜமன்னன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஏ. முஹம்மத் ஷாஹின் ஷா வரவேற்றாா். திருப்பத்தூா் ... மேலும் பார்க்க