செய்திகள் :

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்கள் திரும்ப ஒப்படைப்பு!

post image

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மோதல்கள் நிறைந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்திவந்த துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருள்களை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.

மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா கடந்த 20-ஆம் தேதி, மக்கள் தங்களிடம் சட்டவிரோதமாக வைத்துள்ள ஆயுதங்களை 7 நாள்களுக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் தாமாக முன்வந்து ஆயுதங்களை ஒப்படைப்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டது என்றும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: விண்வெளிக்குச் செல்லும் பிரபல பாடகி! யார் தெரியுமா?

அதன்படி, காங்போக்பி மாவட்டத்தில் உள்ள சைகுல் காவல் நிலையத்தில், கைத்துப்பாக்கி, அதிநவீன துப்பாக்கி, கையெறி குண்டு, அதன் தோட்டாக்கள் மற்றும் இரண்டு வயர்லெஸ் ஃபோன்கள் மற்றும் பிற பொருள்களை போராட்டக்காரர்கள் ஒப்படைத்தனர்.

மேலும், பிஷ்ணுப்பூர் மாவட்டத்துக்குள்பட்ட பௌகாச்சோ இகாய் காவல் நிலையத்திலும் எஸ்பிபிஎல் துப்பாக்கி உள்பட சட்டவிரோத ஆயுதங்களைப் போராட்டக்காரர்கள் ஒப்படைத்தனர்.

இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் போராட்டக்காரர்கள் சரணடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மொத்தமாக இதுவரை 109 ஆயுதங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் முதல்வர் என். பைரன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு பிப்.13 முதல் அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது. 2027 வரை பதவிக்காலம் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவை இடை நிறுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

'பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல' - விவசாயிகள் மறுப்பு!

மகாராஷ்டிரத்தில் புல்தானா மாவட்ட மக்களின் முடி உதிர்தல் பிரச்னைக்கு கோதுமை காரணமல்ல என்று பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கூறியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டர் லியனை பிரதமர் மோடி வரவேற்றார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தேசிய தலைநகரில் உள்ள... மேலும் பார்க்க

கொல்கத்தா கொடூரம்: நடந்தது என்ன? சிறுவன் வாக்குமூலம்!

கொல்கத்தாவில், சகோதரர்களின் மனைவிகள் மற்றும் ஒரு மகள் மரணமடைந்து, சகோதரர்கள் மற்றும் ஒரு மகன் விபத்தில் படுகாயமடைந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.14 வயது பிரதீப் தே... மேலும் பார்க்க

மணிப்பூர்: ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிப்பு!

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் ஆளுநர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் கடந்த பிப். 13 முதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது. இங்கு கலவரம் மற்று... மேலும் பார்க்க

பெங்களூரு விமான நிலையத்தில் காவலரை தாக்கிய வெளிநாட்டவர் கைது!

பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழில்படையைச் சேர்ந்த வீரரை தாக்கிய வெளிநாட்டுப் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவரை விமானத்தில் செல... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து வந்த மிரட்டல்... மகாராஷ்டிர முதல்வரின் பாதுகாப்பு அதிகரிப்பு!

மகாராஷ்டிர முதல்வருக்கு பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து மிரட்டல் செய்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்த ... மேலும் பார்க்க