செய்திகள் :

200 தொகுதிகளில் திமுக வெல்லும்: பிரசாரத்தில் மீண்டும்

post image

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, நீண்ட நாள்களுக்கு பிறகு சென்னையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:

”யார்யார் எந்த மொழியைக் கற்றுக் கொள்ள விரும்புகிறார்களோ, அதனைக் கற்றுக் கொள்ளட்டும். யாரையும் காட்டாயப்படுத்த வேண்டாம். 5,000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மொழி தமிழ். 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் திருக்குறளை தமிழில் எழுதி வைத்துள்ளார்.

வலிமையான தமிழ் மொழிக்காக உயிரையும் கொடுப்பேன் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அவரின் வார்த்தைகள் மக்களை நெகிழ வைத்துள்ளது.

வருகின்ற 2026 தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்” எனத் தெரிவித்தார்.

தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர்: அண்ணாமலை

கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக, முதல்வர் ஸ்டாலின் தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.மொழிப் போரில் தமிழ்நாடு போராட... மேலும் பார்க்க

முதல்வரை நேரில் சென்று வாழ்த்திய கமல்ஹாசன்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.இது தொடர் கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதில்,”நாளை பிறந்த நாள் காணு... மேலும் பார்க்க

இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் தேசவிரோதிகள் யார்? முதல்வர் கேள்வி!

இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் தேசவிரோதிகள் யார்? என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து கட்சியினருக்கு இன்று(பிப். 28) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித... மேலும் பார்க்க

மாய்ந்தாலும் மடிந்தாலும் இரு மொழிக் கொள்கைதான்: அமைச்சர் சேகர்பாபு

நாங்கள் மாய்ந்தாலும் மடிந்தாலும் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.சென்னை பிராட்வே பகுதியில் போதை இல்லா தமிழகம் திட்டத்தின் கீழ் மாணவ... மேலும் பார்க்க

மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்!

மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர்! நாளை பொறுப்பேற்பு!

சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய தலைவராக பாலசந்திரன் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், அமுதா முதல் பெண் தலைவராக... மேலும் பார்க்க