செய்திகள் :

SEBI Chief : 'அறிவிக்கப்பட்ட அடுத்த செபி தலைவர்!' - யார் இந்த துஹின் காந்தா பாண்டே?!

post image

இன்றோடு தற்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச்சின் பணிக்காலம் முடிவடைகிறது.

இதையொட்டி, அடுத்த செபி தலைவராக தற்போது நிதி செயலாளராக இருக்கும் துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். செபி தலைவரின் பணிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். துஹின் 2028-ம் ஆண்டுவரை இந்தப் பொறுப்பில் தொடர்வார்.

பஞ்சாப்பைச் சேர்ந்தவர் துஹின் காந்தா பாண்டே. முன்பு இவர் ஒடிசா மாநிலத்தின் நிதிச் செயலாளராகவும், திட்டக்குழுவிலும் பணியாற்றி இருக்கிறார்.

செபி தொடங்கப்பட்டத்தில் இருந்து இதுவரை அதற்கு 11 பேர் தலைவர்களாக இருந்துள்ளனர். அதில் மாதபி பூரி புச்சை தவிர, மீதி இருந்த 10 தலைவர்களும் ஒன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அல்லது பொதுத்துறையில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். இந்த வரிசையில் தற்போது துஹின் காந்தா பாண்டேவும் இணைகிறார்.

தற்போதைய இந்திய நிதி செயலாளர்...அடுத்த செபி தலைவர்!

இவர் 1987-ம் ஆண்டு பேட்ச் ஓடிசா கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இவர் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை செயலாளராக முன்னர் இருந்தார். இவர் தான் அந்தத் துறையின் நீண்ட கால செயலாளர் என்ற பெருமையை இதுவரையும் தக்க வைத்துள்ளார்.

துஹின் செயலாளராக இருந்த அந்தக் காலக்கட்டத்தில் தான் ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் துஹின் இந்தியாவின் நிதி செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் பார்க்க அமைதியாக இருந்தாலும், சட்டத் திட்டங்கள் என்று வரும்போது அதை கடுமையாகப் பின்பற்றுவார் என்று கூறப்படுகிறது. அதானி குழுமத்தின் மோசடி உள்ளிட்ட பிரச்னைகளில் அடிப்பட்டு வந்த செபி மற்றும் செபி தலைவரின் பெயர் இவர் வருகைக்கு பிறகு என்னவாக மாறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அமெரிக்காவில் கோமாவில் இருக்கும் மகள்; கிடைக்காத விசா... தவிக்கும் இந்திய மாணவியின் பெற்றோர்!

அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவி நீலம் ஷிண்டே. இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இவருக்கு அமெரிக்காவில் பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. அதில் இவருக்கு மார்பு ம... மேலும் பார்க்க

`Gold card' US visa: அமெரிக்க குடியுரிமை வேண்டுமா? -ட்ரம்ப் அறிமுகப்படுத்திய புதிய வழி! |Explained

`Gold card' US visa - இதோ வந்துவிட்டது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு.ஒருபக்கம் அமெரிக்கர் அல்லாதவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்து வருகிற ட்ரம்... மேலும் பார்க்க

Preity Zinta: "BJPயிடம் என் சமூக வலைத்தளக் கணக்கைக் கொடுத்து பணம் வாங்கினேனா?" - பிரீத்தி ஜிந்தா

பிரபல பாலிவுட் நடிகையாகவும், ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் உரிமையாளருமாக இருப்பவர் நடிகை பிரீத்தி ஜிந்தா.'எக்ஸ்' வலைத்தளத்தில் தனக்கென 6 மில்லியம் ஃபாலோவர்ஸை வைத்திருக்கிறார் பிரீத்தி ஜிந்தா. சமீபத... மேலும் பார்க்க

Odisha: ``தரமற்ற உணவு, அவமரியாதை..'' - ஆட்சியரிடம் புகாரளிக்க 20 கி.மீ நடந்து சென்ற 116 மாணவர்கள்!

அரசு பள்ளியின் 116 மாணவர்கள் ஆட்சியரிடம் புகாரளிக்க 20 கி.மீ நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இருக்கிறது பாசிபிதா அரசு உயர்நிலைப் பள்ளி.... மேலும் பார்க்க

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் புகைப்படங்கள் அகற்றமா? - ரேகா குப்தா விளக்கம்!

டெல்லி முதல்வர் அலுவலகத்திலிருந்து பகத் சிங் மற்றும் அம்பேத்கரின் புகைப்படங்களை அகற்றியதாக பாஜக மீது எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இக்குற்றச்சாட்டை மறுத்து, விளக்... மேலும் பார்க்க

America: `இப்படி நடக்கும்னு நினைக்கல' - ட்ரம்ப் உத்தரவால் பாஸ்போர்ட்டில் ஆணாக மாற்றப்பட்ட திருநங்கை!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆண், பெண் பாலினங்களைத் தவிர, பிற பாலினங்களை ஏற்க மறுப்பவர், அங்கீகரிக்காதவர் என்பது அனைவரும் அறிந்ததே.அதிபராகப் பதவியேற்றதும் அவர் அடுக்கடுக்காக கையெழுத்திட்ட உத்தரவுகளில், 'இன... மேலும் பார்க்க