செய்திகள் :

தங்கம் விலை அதிரடி குறைவு!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 அதிரடியாக வெள்ளிக்கிழமை குறைந்துள்ளது.

கடந்த சில நாள்களாக தங்கம் விலை அதிரடி ஏற்றத்தைக் கண்டு வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டு ஒரு சவரன் தங்கம் ரூ. 64,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, அடுத்தடுத்து இரு நாள்களில் ரூ. 520 குறைந்து வியாழக்கிழமை காலை ஒரு சவரன் ரூ. 64,080-க்கு விற்பனையானது.

இதையும் படிக்க : காவல் நிலையத்தில் இன்று ஆஜராகிறார் சீமான்!

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அதிரடியாக ரூ. 400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 63,680-க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 7,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாள்களுக்கு பிறகு தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 64,000-க்கு கீழ் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல், வெள்ளியும் இரண்டு நாள்களுக்கு பிறகு கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ. 105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர்: அண்ணாமலை

கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக, முதல்வர் ஸ்டாலின் தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.மொழிப் போரில் தமிழ்நாடு போராட... மேலும் பார்க்க

முதல்வரை நேரில் சென்று வாழ்த்திய கமல்ஹாசன்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.இது தொடர் கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதில்,”நாளை பிறந்த நாள் காணு... மேலும் பார்க்க

இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் தேசவிரோதிகள் யார்? முதல்வர் கேள்வி!

இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் தேசவிரோதிகள் யார்? என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து கட்சியினருக்கு இன்று(பிப். 28) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித... மேலும் பார்க்க

மாய்ந்தாலும் மடிந்தாலும் இரு மொழிக் கொள்கைதான்: அமைச்சர் சேகர்பாபு

நாங்கள் மாய்ந்தாலும் மடிந்தாலும் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.சென்னை பிராட்வே பகுதியில் போதை இல்லா தமிழகம் திட்டத்தின் கீழ் மாணவ... மேலும் பார்க்க

மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்!

மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர்! நாளை பொறுப்பேற்பு!

சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய தலைவராக பாலசந்திரன் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், அமுதா முதல் பெண் தலைவராக... மேலும் பார்க்க