செய்திகள் :

மொழிப் போரில் தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்! -முதல்வர் ஸ்டாலின்

post image

மொழிப் போரில் தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பொதுவாக நான் பிறந்தநாளை பெரிய அளவில் ஆடம்பரமாக கொண்டாடுவதில்லை. ஆனால் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவது, திமுக அரசின் சாதனைகளை, கொள்கைகளை எடுத்துரைக்க பொதுக்கூட்டங்கள் நடத்துவார்கள். ஆனால் இந்த முறை என்னுடைய பிறந்தநாள் வேண்டுகோளாக என் உயிரோடு கலந்திருக்கும் உடன்பிறப்புகளுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

இன்றைக்கு தமிழ்நாடு தன்னுடைய உயிர் பிரச்னையான மொழிப் போரையும், தன்னுடைய உரிமை பிரச்னையான தொகுதி மறுசீரமைப்பும் எதிர்கொண்டிருக்கிறது. இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பு என்பது நம் மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, நம்முடைய சமூகநல திட்டங்களை பெரிதும் பாதிக்கும். இதை நீங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும்.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக நம்முடைய போராட்டத்தை தொடங்க வேண்டும். இப்போது கர்நாடகம், பஞ்சாப், தெலங்கான போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவு குரல் வந்துள்ளது. இதைப் பார்த்து மத்திய அரசு ஹிந்தியை திணிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு அதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது.

மும்மொழிக்கொள்கையைக் ஏற்காததால் நம்முடைய நிதியும் இன்னும் தரவில்லை. தமிழ்நாட்ட்டுக்கான தொகுதிகளைக் குறைக்க மாட்டோம் என்று கூறும் மத்திய அரசு, மற்ற மாநிலங்களில் எண்ணிக்கை அதிகரிப்பதைப் பற்றி எதையும் கூறவில்லை.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரிக்காதீர்கள். நாட்டின் வளர்ச்சி அடிப்படையில் நாட்டின் மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்காதீர்கள். அப்படி நடந்தா தமிழ்நாடும் திமுகவும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

தமிழ்நாட்டுக்காக ஒன்றுபட்டு போராடும்.. தமிழ்நாடும் போராடும்.. தமிழ்நாடு வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்திய அரசு திட்டமிட்டபடி தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்றும், 39 தொகுதிகள் 31 ஆக மாறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் தேசவிரோதிகள் யார்? முதல்வர் கேள்வி!

இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் தேசவிரோதிகள் யார்? என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து கட்சியினருக்கு இன்று(பிப். 28) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித... மேலும் பார்க்க

மாய்ந்தாலும் மடிந்தாலும் இரு மொழிக் கொள்கைதான்: அமைச்சர் சேகர்பாபு

நாங்கள் மாய்ந்தாலும் மடிந்தாலும் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.சென்னை பிராட்வே பகுதியில் போதை இல்லா தமிழகம் திட்டத்தின் கீழ் மாணவ... மேலும் பார்க்க

மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்!

மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர்! நாளை பொறுப்பேற்பு!

சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய தலைவராக பாலசந்திரன் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், அமுதா முதல் பெண் தலைவராக... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: இபிஎஸ்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு... மேலும் பார்க்க

மத்திய கல்வி இணையமைச்சர் வருகை: திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டுக்கு வருகை தரும் மத்திய கல்வி இணையமைச்சருக்கு எதிராக திமுக மாணவரணி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று(பிப். 28) சென்னையில் உள்ள ஐஐடி கல்வி ந... மேலும் பார்க்க