செய்திகள் :

மதுபோதையில் 17 வயது சிறுவன் வல்லுறவு: படுகாயங்களுடன் குழந்தை கவலைக்கிடம்!

post image

மத்தியப் பிரதேசத்தில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் பெண்ணுறுப்பில் 28 தையல்கள் போட வேண்டும் என்றும் கொலோஸ்டமி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஷிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது குழந்தை, கடந்த பிப். 23ஆம் தேதி காணாமல் போனது. உறவினர்கள் இரண்டு மணிநேரம் தேடிய பிறகு, அருகிலுள்ள வீட்டின் மொட்டை மாடியில் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டது.

குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க : புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது:

”குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தபோது, குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் மதுபோதையில் இருந்துள்ளார். இந்த சம்பவத்தின்போது, குழந்தையின் தலையை சுவற்றில் பலமுறை மோதவைத்துள்ளார்.

தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடல்கள், பெண்ணுறுப்பு பகுதிகளில் பல வெட்டு காயங்களும் கடித்ததற்கான காயங்களும் உள்ளன.

குழந்தை இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. கண்விழித்தாலும் யாருடனும் எதுவும் பேசவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை சாலையில் நிற்கவைத்து சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விரைவு நீதிமன்றம் அமைத்து குற்றவாளிக்கு உடனடியாக தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மணிப்பூர்: ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிப்பு!

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் ஆளுநர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் கடந்த பிப். 13 முதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது. இங்கு கலவரம் மற்று... மேலும் பார்க்க

பெங்களூரு விமான நிலையத்தில் காவலரை தாக்கிய வெளிநாட்டவர் கைது!

பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழில்படையைச் சேர்ந்த வீரரை தாக்கிய வெளிநாட்டுப் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவரை விமானத்தில் செல... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து வந்த மிரட்டல்... மகாராஷ்டிர முதல்வரின் பாதுகாப்பு அதிகரிப்பு!

மகாராஷ்டிர முதல்வருக்கு பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து மிரட்டல் செய்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்த ... மேலும் பார்க்க

நகைக் கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! ரிசர்வ் வங்கியின் புதிய விதி!!

நகைக் கடன் வாங்கியவர்கள், அதற்கான அவகாசம் முடிந்ததும் அதனை வட்டி மட்டும் கட்டி மறு அடமானம் வைப்பதை ரிசர்வ் வங்கி தடை செய்துவிட்டது.பொதுவாக வங்கிகளில் நகையை அடமானமாக வைத்து பணம் வாங்குவதுதான் நகைக்கடன்... மேலும் பார்க்க

தில்லி சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த கூட்டத்தில் ரேகா குப்தா பங்கேற்பு!

உள்துறை அமைச்சகத்தின் வடக்கு தொகுதி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் தில்லி முதல்வர் ரேகா குப்தா வருகை தந்துள்ளார். தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மறு ஆய்வு செய்வதற்காக ... மேலும் பார்க்க

ட்ரோன்கள்.. மோப்ப நாய்கள்.. 100 போலீஸ்..! புணே வன்கொடுமை குற்றவாளி சிக்கியது எப்படி?

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 75 மணி நேரத்தில் காவல்துறையினர் குற்றவாளியைப் பிடித்துள்ளனர்.வன்கொடுமைபுணேயின் ஸ்வா்கேட் பேருந... மேலும் பார்க்க