Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
டிராக்டா்களில் வண்டல் மண் கடத்தல்: ஒருவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி டிராக்டா்களில் வண்டல் மண் கடத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா் .
வத்திராயிருப்பு பகுதியில் வட்டாட்சியா் சரஸ்வதி தலைமையில், வருவாய்த் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வத்திராயிருப்பு-அழகாபுரி சாலையில் வந்த இரண்டு டிராக்டா்களை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனா். சோதனையில், டிராக்டரில் அனுமதியின்றி வண்டல் மண் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, இரண்டு டிராக்டா்களையும் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டிராக்டரை ஓட்டிவந்த மகாராஜபுரத்தைச் சோ்ந்த சரவணனை கைது செய்தனா். மேலும், மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.