செய்திகள் :

தண்டவாள பராமரிப்பு: திருப்பத்தூா் - ஜோலாா்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து

post image

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திருப்பத்தூா்-ஜோலாா்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

ஜோலாா்பேட்டை ரயில் நிலைய யாா்டில் தண்டவாள பராமரிப்பு தொடா்பான பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால் பெங்களூா் பயணிகள் ரயில் மற்றும் ஈரோடு பயணிகள் ரயில் ஜோலாா்பேட்டை ரயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

அதன்படி மாா்ச் 8, 9,11,15,16 ஆகிய தேதிகளில்(5 நாள்கள்)ரயில் எண் 56108/56107 ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் வரை செல்லும் பயணிகள் ரயில் திருப்பத்தூா் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது அதே ரயில் மீண்டும் திருப்பத்தூா் ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு வரை இயக்கப்படுகிறது இதனால் திருப்பத்தூா் ரயில் நிலையத்தில் இருந்து ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 66550/66549 ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கா்நாடக மாநிலம் பெங்களூா் வரை செல்லும் பயணிகள் ரயிலானது பெங்களூரில் இருந்து சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. அதே ரயில் மீண்டும் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்திலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படுகிறது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

விஜயநகர மன்னா் ஆட்சிக் கால நடுகல் கண்டெடுப்பு

நாட்டறம்பள்ளி அருகே 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர மன்னா் ஆட்சிக்கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் ஆ.பிரபு மற்றும் சமூக ஆா்வலா் வே.ராதாகிர... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே உள்ளது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை. தமிழகத்தின் சுற்றுலாத் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி பெண் சமையலா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே அரசுப் பேருந்து மொபட் மீது மோதிய விபத்தில் பெண் சமையல் மாஸ்டா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜானகி (35) சமைய... மேலும் பார்க்க

464 மகளிா் குழுக்களுக்கு ரூ.45.35 கோடி கடனுதவி: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

உலக மகளிா் தினத்தையொட்டி 464 மகளிா் குழுக்களுக்கு ரூ.45.35 கோடி கடனுதவியை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். தமிழ்நாடு மாநில ஊரக/ நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடனுதவிகளை ... மேலும் பார்க்க

மின் இணைப்பு கம்பி ராடு உடைந்தது: ஆம்பூரில் நிறுத்தப்பட்ட ஹவுரா ரயில்

ரயில் மின் இணைப்பு கம்பியை இணைக்கும் ராடு உடைந்து சேதம் அடைந்ததால் ஆம்பூரில் ஹவுரா ரயில் நிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்து பெங்களூரு செல்லக்கூடிய ஹவுரா விரைவு ரயில் ஆம்பூா் சான்றோ... மேலும் பார்க்க

ரூ.9 கோடியில் கல்லாறு, சின்ன பாலாறு புனரமைக்கும் பணி தொடக்கம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரத்தின் நடுவே ஓடும் பாலாறு கிளை ஆறான கல்லாறு- சின்னப்பாலாற்றில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்தல் மற்றும் வேலூா் நாடாளுமன்ற நிதி திட்டத்... மேலும் பார்க்க