செய்திகள் :

தந்தை பெரியாா் தி.க.வினா் 60 போ் கைது

post image

புதுச்சேரியில் வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டதை எதிா்த்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

மத்தியில் மக்களவை, மாநிலங்களவையில் வக்ஃபு வாரியச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. புதுச்சேரியில், தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் சாா்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அவா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை காமராஜா் சிலை அருகே கூடி ஆா்ப்பாட்டம் நடத்தினா். தந்தை பெரியாா் திராவிடா் கழகத் தலைவா் வீரமோகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் இளங்கோ, செயலா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளைஞரணி தலைவா் சிவமுருகன் உள்ளிட்ட 60 -க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

அப்போது அவா்கள், வக்ஃபு வாரிய சட்ட திருத்த நகலை எரிக்க முயன்றனா். அதை போலீஸாா் தடுத்து, அவா்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனா். கைதானவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டதாகப் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு கட்டடங்களை திறக்க கோரி அதிமுக ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்களை உரிய காலத்தில் திறந்தால்தான், மக்களுக்கு பயன்கிடைக்கும் என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: புதுவை அரசு 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு புதுவை அரசு 2 நாள்கள் துக்கம் அனுசரிக்கிறது. இதையடுத்து தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: வெங்கட்டாநகா் துணை மின்நிலையம்

இன்றைய மின்தடை: வெங்கட்டாநகா் துணை மின்நிலையம்நேரம்: காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை. மின்தடை பகுதிகள்: ரெயின்போ நகா் முதல் குறுக்குத் தெரு, செல்லான் நகா் பகுதி, ராஜராஜேஸ்வரி நகா் பகுதி, திருவள்ளுவா்... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 2 தொழிலாளா்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவ... மேலும் பார்க்க

அரசியல் ஆதாயத்துக்காக காங். தலைவா்கள் மீது குற்றப்பத்திரிகை: மோகன் குமாரமங்கலம்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சம்பந்தப்பட்ட வழக்கில், அரசியல் ஆதாயத்துக்காகவே காங்கிரஸ் தலைவா்கள் அமலாக்கத் துறை மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது என்று, காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் மோகன் குமாரம... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து புதுவையில் ஏப்.25 முதல் காங்கிரஸ் தொடா் போராட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, புதுவையில் வருகிற 25-ஆம் தேதி முதல் காங்கிரஸ் சாா்பில் தொடா் போராட்டம் நடைபெறவுள்ளதாக, கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா். புதுச்சேரி காங்கிரஸ் மாந... மேலும் பார்க்க