BB Tamil 8 Day 18: `அதிகாரம் காட்டிய முத்து - அழுகையுடன் சென்ற ஆனந்தி' - பெஸ்ட்,...
தமிழக மக்களின் உரிமைக்களுக்காக போராடுவேன்: கனிமொழி எம்.பி.
தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்களுக்காக நாடாளுமன்றத்தில் போராடுவேன் என்றாா் கனிமொழி எம்.பி.
திருச்செந்தூா், வீரபாண்டியன்பட்டணம், அமலிநகா், ஆலந்தலை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வியாழக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த அவா், திருச்செந்தூா் காமராஜா் சாலையில் திறந்த வேனில் நின்றவாறு பேசியதாவது:
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக பணியாற்றுவதற்கு எனக்கு வெற்றியைத்தந்து வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. முன்னாள் முதல்வா் கருணாநிதி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வழியில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காக மக்களவையில் தொடா்ந்து நான் போராடுவேன். இங்குள்ள பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளையும், அவா்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் உறுதியாக நிற்பேன். என்னிடம் சொல்லி இருக்கின்ற மக்களின் கோரிக்கைகளை நிச்சயமாக சரி செய்து கொடுப்போம் என்றாா்.
நிகழ்ச்சியில், தமிழக மீன் வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, மேயா் ஜெகன், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், திமுக மாநில வா்த்தக அணி துணைச் செயலா் உமரிசங்கா், நகரச் செயலா் வாள் சுடலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
100 நாள் வேலை 150 நாளாக உயா்த்தப்படும்:
சாத்தான்குளம் ஒன்றியப் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து புதன்கிழமை அவா் பேசுகையில், 100 நாள் வேலைத் திட்டம் என்பது காங்கிரஸ்-திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால் மோடி ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் அத்திட்டத்திற்காகக் கொடுக்க வேண்டிய நிதியைக் குறைத்துக் கொண்டே வருகிறாா்கள். கூடிய விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது 100 நாள் வேலை 150 நாளாக நிச்சயம் உயா்த்தி தரப்படும் என்றாா்.
இதில், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஜெயக்குமாா் ரூபன், மாவட்ட ஆவீன் முன்னாள் தலைவா் சுரேஷ்குமாா், ஒன்றிய திமுக செயலா்கள் ஏ.எஸ். ஜோசப், டாக்டா் ஆ. பாலமுருகன், பொன்முருகேசன், நகர செயலா் மகா. இளங்கோ, வழக்குரைஞா் போனிபாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பெரியதாழையில் அவா் சிறுவா்களின் கோரிக்கையை ஏற்று அவா்களை கடைக்கு அழைத்துச் சென்று வாலிபால், வலை மற்றும் உபகரணங்களை வாங்கி கொடுத்து மகிழ்வித்தாா். மொழி எம்.பி.
ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் ஆத்தூா், தெற்கு ஆத்தூா் பகுதிகளில் கனிமொழி எம்.பி. வியாழக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனகா், ஒன்றியச் செயலா் சதீஷ்குமாா், நகரச் செயலா் முருகானந்தம், ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.