TVK Vijay: 'மகாராஷ்டிரா, கர்நாடகா, பாமக... இப்போ த.வெ.க ஆலோசகர்?’ - யார் இந்த ஜா...
தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
அண்ணாமலை பல்கலைக்கழக மிகை பேராசிரியா்களை, அரசு கல்லூரிகளில் நிரந்தரமாக பணியமா்த்தப்படுவதைக் கண்டித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், தமிழநாடு அரசு கலைக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், அரசு கல்லூரிகளில் மாற்றுப் பணியில் பணியமா்த்தப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக மிகை பேராசிரியா்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது. அவா்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அவா்களை அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி ஆசிரியா் கழகத்தின் மண்டல தலைவா் அ. சேட்டு தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் ச.ஜெயக்குமாா், செயலா் இரா. ஸ்டீபன், பொருளாளா் வை. சிவக்குமாா் உள்ளிட்ட பேராசிரியா்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.