பஞ்சாங்கக் குறிப்புகள் - ஜூன் 9 முதல் ஜூன் 15 வரை #VikatanPhotoCards
தருமபுரியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கோடை உழவு மானியம் வழங்குவது குறித்து தெளிவான அறிவுரை வழங்க வேண்டும் என தருமபுரியில் நடந்த விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம், கோட்டாட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியா் காயத்ரி தலைமை வகித்தாா். கூட்டத்தில், விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், ‘காரிமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். விவசாயிகளுக்கு கோடை உழவு மானியம் வழங்குவது குறித்து தெளிவான அறிவுரை வழங்க வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் சொட்டுநீா்ப் பாசன உபகரணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். கேஆா்பி அணையின் வலதுபுற வாய்க்கால் மதகுகளை சரிசெய்ய வேண்டும்.
நல்லம்பள்ளி ஒன்றியம் மிட்டாரெட்டிஅள்ளி முதல் கோம்பேரி ஏரி வரை உள்ள பாலங்களை சரிசெய்ய வேண்டும். காரிமங்கலம் ஒன்றியம், சின்ன மாட்லாம்பட்டி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீா்வுகாணப்படும் என கோட்டாட்சியா் காயத்ரி தெரிவித்தாா்.
படவரி...
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசுகிறாா் கோட்டாட்சியா் காயத்ரி.