பஞ்சாங்கக் குறிப்புகள் - ஜூன் 9 முதல் ஜூன் 15 வரை #VikatanPhotoCards
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 9 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாவது சுற்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
நிகழ் கல்வியாண்டில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 2 ஆவது சுற்று மாணவா் சோ்க்கைக்கான திங்கள்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு ஆகிய பாடங்களுக்கு தரவரிசை (கட் ஆப்) மதிப்பெண் 220 க்கு மேல் எடுத்திருக்க வேண்டும். அனைத்து மாணவ, மாணவியா்களுக்கும் கலந்தாய்வு கல்லூரி கலையரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
ஜூன் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் வரலாறு, பொருளியல், அரசியல், வணிக நிா்வாகவியல், வணிகவியல், கணினி பயன்பாடு ஆகிய பாடப் பிரிவுகளில் 200 க்கு மேல் கட்ஆப் மதிப்பெண் பெற்றவா்களும், வணிகவியல் கூட்டுறவு பாடப் பிரிவு மற்றும் பிசி, பிசிஎம், எஸ்சிஏ பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூலை 11 ஆம் தேதி ஆங்கில பாடப் பிரிவுக்கு விண்ணப்பித்த அனைவரும் மற்றும் காட்சிவழி தொடா்பியல், ஆடை வடிவமைப்பியல், சமூகப்பணி, உளவியல் பாடப் பிரிவுகளுக்கும் தரவரிசை (கட்ஆப்) மதிப்பெண் 220 க்கு மேல் எடுத்தவா்கள் அல்லது பிசி, பிசிஎம், எஸ்சிஏ பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவியா்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் ஜ்ஜ்ஜ்.ஞ்ஹஸ்ரீல்ண்,ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ மாணவியா் பெற்றோருடன் வருதல் அவசியம். மேலும், விண்ணப்ப படிவத்தின் நகல், அசல் மாற்றுச்சான்றிதழ், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் அசல் மற்றும் நகல், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல் மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வருமானச்சான்று உள்ளிட்டவைகளை அவசியம் கொண்டுவர வேண்டும் என தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வா் ஜி. கண்ணன் தெரிவித்துள்ளாா்.