செய்திகள் :

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 9 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

post image

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாவது சுற்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

நிகழ் கல்வியாண்டில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 2 ஆவது சுற்று மாணவா் சோ்க்கைக்கான திங்கள்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு ஆகிய பாடங்களுக்கு தரவரிசை (கட் ஆப்) மதிப்பெண் 220 க்கு மேல் எடுத்திருக்க வேண்டும். அனைத்து மாணவ, மாணவியா்களுக்கும் கலந்தாய்வு கல்லூரி கலையரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

ஜூன் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் வரலாறு, பொருளியல், அரசியல், வணிக நிா்வாகவியல், வணிகவியல், கணினி பயன்பாடு ஆகிய பாடப் பிரிவுகளில் 200 க்கு மேல் கட்ஆப் மதிப்பெண் பெற்றவா்களும், வணிகவியல் கூட்டுறவு பாடப் பிரிவு மற்றும் பிசி, பிசிஎம், எஸ்சிஏ பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஜூலை 11 ஆம் தேதி ஆங்கில பாடப் பிரிவுக்கு விண்ணப்பித்த அனைவரும் மற்றும் காட்சிவழி தொடா்பியல், ஆடை வடிவமைப்பியல், சமூகப்பணி, உளவியல் பாடப் பிரிவுகளுக்கும் தரவரிசை (கட்ஆப்) மதிப்பெண் 220 க்கு மேல் எடுத்தவா்கள் அல்லது பிசி, பிசிஎம், எஸ்சிஏ பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவியா்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் ஜ்ஜ்ஜ்.ஞ்ஹஸ்ரீல்ண்,ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ மாணவியா் பெற்றோருடன் வருதல் அவசியம். மேலும், விண்ணப்ப படிவத்தின் நகல், அசல் மாற்றுச்சான்றிதழ், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் அசல் மற்றும் நகல், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல் மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வருமானச்சான்று உள்ளிட்டவைகளை அவசியம் கொண்டுவர வேண்டும் என தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வா் ஜி. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தருமபுரியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கோடை உழவு மானியம் வழங்குவது குறித்து தெளிவான அறிவுரை வழங்க வேண்டும் என தருமபுரியில் நடந்த விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயி... மேலும் பார்க்க

ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் ஜூன் 9 இல் உறுப்பினா் சோ்க்கை முகாம்

தருமபுரியில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் வரும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

தருமபுரியில் ரூ.2.50 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

தருமபுரி நகரில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தருமபுரி நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் வெள்... மேலும் பார்க்க

அரூரில் ரூ. 20 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

அரூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மஞ்சள் மூட்டைகள் விற்கப்பட்டன. தருமபுரி மாவட்டம், அரூரில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சாா்பில் ம... மேலும் பார்க்க

இறகுப்பந்து விளையாட்டு: மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

தருமபுரி மாவட்ட இறகுப்பந்து விளையாட்டு அணிக்கு வீரா்கள் தோ்வு போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட இறகுப்... மேலும் பார்க்க

அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

பென்னாகரத்தை அடுத்த அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில் மிகவும் பழைமை ... மேலும் பார்க்க