செய்திகள் :

தாய்லாந்து, கம்போடியா படைகள் மோதல்: இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்

post image

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை அடைந்ததைத் தொடா்ந்து, எல்லைக்கு அருகிலுள்ள 7 மாகாணங்களில் இந்தியர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

தாய்லாந்து சுற்றுலா ஆணையத்தின் ஒரு பதிவை இணைத்து, உபோன் ராட்சத்தானி, சுரின், சிசாகெட், புரிராம், சா கேயோ, சாந்தபுரி மற்றும் டிராட் ஆகிய ஏழு மாகாணங்களில் உள்ள பிரபலமான இடங்களுக்குச் சுற்றுலா செல்வதை தவிர்க்கும்படி இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் தாய்லாந்திற்குச் செல்லும் அனைத்து இந்தியர்களும் தாய்லாந்து சுற்றுலா ஆணையம் உள்ளிட்டவையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் ஏதேனும் உதவிக்கு தாய்லாந்து உள்ளூர் சுற்றுலா அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்போடியாவுடனான எல்லைப் பகுதியில் கடந்த புதன்கிழமை கண்ணிவெடி வெடித்து ஐந்து தாய்லாந்து வீரா்கள் காயமடைந்தனா். அதைத் தொடா்ந்து, நீண்ட காலமாகவே எல்லைப் பிரச்னை நிலவி வரும் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே பதற்றம் புதிய உச்சத்தை அடைந்தது. இந்தச் சம்பவத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, தங்கள் நாட்டுக்கான கம்போடிய தூதரை வெளியேறுமாறு தாய்லாந்து அரசு உத்தரவிட்டது.

மேலும், கம்போடியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரையும் தாய்லாந்து திரும்ப அழைத்தது. அத்துடன், கம்போடியாவுடனான எல்லைத் தடங்களை மூடிய தாய்லாந்து, அந்த நாட்டில் வசிக்கும் தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியது. தாய்லாந்து அரசின் இந்த நடவடிக்கைகளால் பதற்றம் மேலும் அதிகரித்த நிலையில், இரு நாட்டுப் படையினரும் பல்வேறு எல்லைப் பகுதிகளில் வியாழக்கிழமை மோதலில் ஈடுபட்டனா்.

கேரளத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

எறிகணைகள், ஏவுகணை குண்டுகளை வீசி பரஸ்பரம் இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தினா். கம்போடிய ராணுவ நிலைகள் மீது தாய்லாந்து படையினா் விமானத் தாக்குதல் நடத்தினா். இந்த மோதலில் 11 போ் உயிரிழந்தனா், இதில் இரு தரப்பு வீரா்களும், பொதுமக்களும் அடங்குவா். 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

The tourism authority said that "several attractions" in Ubon Ratchathani, Surin, Sisaket, Buriram, Sa Kaeo, Chanthaburi and Trat provinces are not recommended for visiting.

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சமீபகாலமாக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், மாணவர்களின் தற்கொலை எண்ணத்தைப் போக்க உச்சநீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.ஆந்... மேலும் பார்க்க

அவசர ஊர்தியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! எதிர்க்கட்சிகள் கண்டனம்

பிகார் மாநிலத்தில் அவசர ஊர்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பெண் ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடற்தகுதித் தேர்வுக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது 2025 வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறது.சன்சத் ரத்னா விருது 2025-க்கு தேர்வானவர்கள்: சுப்ரியா சுலேரவி கிஷன்நிஷிகாந்த் து... மேலும் பார்க்க

அவைத் தலைவரிடம் முதல் கோரிக்கை வைத்து திட்டு வாங்கியதைப் பகிர்ந்த கிரண் ரிஜிஜு

புது தில்லி: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தான் முதன் முதலில், அவைத் தலைவரை சந்தித்தபோது வைத்தக் கோரிக்கையும் அதனால் அவரிடம் திட்டு வாங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.தான் அரசியலில் ... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்: உதய்பூரில் பல் மருத்துவ மாணவி தற்கொலை!

உதய்பூர் அருகேயுள்ள டெபாரியில் பல் மருத்துவம் பயிலும் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை காவலரின் ஒரே மகள் ஸ்வேதா சிங்(25). இவர் ... மேலும் பார்க்க

ஊர்க்காவல்படைத் தேர்வின்போது மயங்கிய பெண்! ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை!!

பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில், ஊர்க்காவல் படைத் தேர்வின்போது மயங்கி விழுந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றியபோது, அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எ... மேலும் பார்க்க