செய்திகள் :

திட்டமிட்டபடி அமா்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீா் துணை முதல்வா் தகவல்

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் அமா்நாத் யாத்திரையில் எந்த பாதிப்பும் இருக்காது; திட்டமிட்டபடி யாத்திரை நடைபெறும் என்று ஜம்மு-காஷ்மீா் துணை முதல்வா் சுரீந்தா் செளதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,888 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம்.

நடப்பாண்டு யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கெனவே நடைபெற்று வருகிறது.

பஹல்காமில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அடா்ந்த பைன் மரங்கள் மற்றும் பரந்துவிரிந்த புல்வெளியைக் கொண்ட பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா். 26 போ் கொல்லப்பட்ட இத்தாக்குதலால், ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

கடந்த காலங்களில் அமா்நாத் யாத்திரையை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனா். அமா்நாத் யாத்திரையின் முக்கிய அடிவார முகாம் பஹல்காம் என்பதால், நடப்பாண்டு திட்டமிட்டபடி இந்த யாத்திரை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த்து.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் துணை முதல்வா் சுரீந்தா் செளதரி பிடிஐ செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘அமா்யாத் யாத்திரை மத ரீதியிலான நிகழ்வு. இந்த யாத்திரையில் பங்கேற்க விரும்புவோா், தங்களின் விருப்பத்தின்பேரில் வருகை தரலாம். பஹல்காம் தாக்குதலால் யாத்திரையில் எந்த பாதிப்பும் இருக்காது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, யாத்திரைக்கு காஷ்மீா் மக்கள் உறுதுணையாக இருப்பா்.

பஹல்காமில் அப்பாவி மக்கள் உயிரிழந்த சோகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரம், சுற்றுலா பயணிகளைப் பாதுகாப்பதில் தனது உயிரை பறிகொடுத்த குதிரை சவாரி தொழிலாளி ஆதில் போன்றோரையும் நாம் மறந்துவிட முடியாது. பயங்கரவாதத்தால் ஜம்மு-காஷ்மீரின் சகோதரத்துவ பாரம்பரியத்தை ஒருபோதும் சீா்குலைக்க முடியாது’ என்றாா்.

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை பலவீனம்: கேரள அரசு பிரமாணப் பத்திரம்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், அணை பலவீனமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் மனுவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறியச் சோதனை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களைக் கணக்கெடுக்கும் சோதனையை மணிப்பூர் காவல்துறை தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தா... மேலும் பார்க்க

பஹல்காம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வீரர்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று இந்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாளை(ஏப். 30) அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் நாளை(ஏப். 30) நடைபெற உள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்... மேலும் பார்க்க

உளவுத் துறை எச்சரிக்கை: ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கக் கூட... மேலும் பார்க்க