செய்திகள் :

திண்டுக்கல்: "கொடுத்த பணத்தைக் கேட்டால் மிரட்டுகிறார்" - காங்கிரஸ் பிரமுகர் மீது பெண் புகார்

post image

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி கிராமம், குழந்தைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, 'பெரியகோட்டையில் வசிக்கும் காமராஜ் மகன் மருதைவீரன், அவரது தங்கை லட்சுமி மற்றும் தாயார் சின்னப்பொன்னு ஆகிய நபர்களுக்கு 3 வருடங்களுக்கு முன்பு ரூ.12,00,000 லட்சம் ரூபாய் அவசர தேவைக்காக வெளியில் வாங்கி கொடுத்தேன்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு இடம் குறைந்த விலைக்கு வருகிறது அதை வாங்க வேண்டும் என்பதற்காக 10 பவுன் நகை மற்றும் என் மகளிடம் இருந்த 14 பவுன் நகை என மொத்தம் 24 பவுன் நகையைக் கொடுத்தேன்.

பல நாள்களாகியும் பணத்தையும் நகையையும் திருப்பி தராததால் கொடுத்த நகையைக் கேட்டு பலமுறை வீட்டிற்குச் சென்றேன். அதற்கு இன்று தருகிறேன் நாளை தருகிறேன் என்று காலம் கடத்தி வந்தார்.

புகார் கொடுத்த சாந்தி
புகார் கொடுத்த சாந்தி

மேலும் மருதைவீரன் என்பவர் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருப்பதால் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் துரைமணிகண்டனிடம் இது பற்றிக் கூறியுள்ளார். மணிகண்டன், மருதைவீரன் இருவரும் இணைந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு என்னை வருமாறும் அங்கு வந்தால் பணம் தருவதாகவும் கூறினார்கள்.

அங்குச் சென்றதற்கு பணம் தரமுடியாது, பணம் கேட்டால் வீட்டை அடித்து நொறுக்குவதோடு குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்று விடுவோம் என்று அடியாட்களை வைத்து மிரட்டி வருகிறார்கள். எனவே, மருதைவீரன், அவரது தங்கை லட்சுமி, தாயார் சின்ன பொன்னு, துரை மணிகண்டன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மபி, ராஜஸ்தானில் இருமல் மருந்தால் 16 குழந்தைகள் மரணம்; தமிழக மருந்து கம்பெனிதான் காரணமா?

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதுவரை இரண்டு மாநிலத்திலும் சேர்த்து 16 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து இறந்துள்ளனர். அவர்க... மேலும் பார்க்க

பெங்களூரு: "உறவுக்கு மதிப்பு கொடுத்தேன்; ஆனால்" - திருமண ஆசையில் ரூ.2.3 கோடியை இழந்த 59 வயது ஆசிரியை

ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதிய அளவுக்குப் பயனளிக்கவில்லை. திருமண ஆசை, பங்கு வர்த்தகம், டிஜிட்டல் கைது என்று எத... மேலும் பார்க்க

`நெஞ்சுவலி சார்' - போலீஸிடமிருந்து தப்பிச்சென்ற விசாரணை கைதி

தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டி சீப்பர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சங்கர் (25). இவர் திருமணம் முடிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். சுபாஷ் சங்கருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரின் அம்... மேலும் பார்க்க

``கட்சி பேதமின்றி சட்டத்தை மட்டுமே நடைமுறைப்படுத்தும் முதல்வர்'' - கரூர் சம்பவம் குறித்து கமல்ஹாசன்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர... மேலும் பார்க்க

கரூர்: 'உடல் பிரச்னையை தீர்க்கிறேன்' - இளம்பெண்ணிடம் ரூ. 5.50 லட்சம் ஏமாற்றிய போலி சாமியார் கைது!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தெப்பக்குளம் தெருவில் உள்ள கருப்பசாமி கோயிலில் கடவூர் தாலுகா, கரிச்சிப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (வயது: 38) என்பவர் பொது மக்களுக்கு குறி சொல்லி வேண்டுதல்களை நிறை... மேலும் பார்க்க

விருதுநகர்: குடும்பப் பிரச்னை; மாமியாரை கிணற்றில் தள்ளிய மருமகன் - போலீஸ் விசாரணை!

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள துய்யனூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் மாரிமுத்து. இவர் மானூர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த வீரேஷ் இருளாயி தம்பதியினரின் மகளான சத்யாவை திருமணம் செய்து கொண்டா... மேலும் பார்க்க