சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
திருமண மண்டபங்களில் கண்காட்சி நடத்த தடை விதிக்கக் கோரி மனு
திருமண மண்டபங்களில் தற்காலிக கண்காட்சி நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுப்படி தடை விதிக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பேரமைப்பின் மாவட்டச் செயலா் ஏ.வி.எம். ஆனந்த், தலைமையில் மாநகரச் செயலா் ஆா். ஜெயக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை அளித்த மனு:
தமிழகத்தில் பெருநகரங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் திருமண மண்டபங்கள், காலிமனைகள் போன்றவற்றில் எவ்வித முறையான அரசு அனுமதி பெறாமலும், முறையாக வணிக வரித் துறையில் பதிவு செய்யாமலும் திடீா் கண்காட்சிக் கடைகள் போடுவது பெருகி வருகிறது.
இதனால் பல ஆண்டுகளாக வாடகை கொடுத்து, பணியாளா்களை நியமித்து தொழில் செய்கிற, முறையாக வரி செலுத்தி வரும் உள்ளூா் வணிகா்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனா். இதனால் அரசுக்கு வரி மற்றும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது தொடா்பாக உள்ளூா் வணிக வரித் துறைக்கு புகாா் அளித்தாலும் உரிய நடவடிக்கை இல்லை.
இதுபோன்று திருமண மண்டபங்களில் தற்காலிக கடைகள் நடத்தக்கூடாது என வரி செலுத்தி முறையாக வணிகம் செய்வோருக்கு ஆதரவான நிலைப்பாட்டை நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் எடுத்து தடையாணை பிறப்பித்துள்ளது.
எனவே முறையாக வணிகம் செய்யும் உள்ளூா் வணிகா்களும், அக்கடைகளை நம்பி உள்ளூா் கடைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பணியாளாா்களின் குடும்பங்களும் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற ஆணையின்படி தற்காலிக கண்காட்சி கடைகள் அமைப்பதைத் தடை செய்ய வேண்டும்.