செய்திகள் :

தில்லி தேர்தல்: கேஜரிவால், அதிஷி உள்ளிட்டோர் வாக்களித்தனர்!

post image

தில்லி பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் கேஜரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 19.95% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தில்லி வடகிழக்கு மாவட்டத்தில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8 என்று எண்ணப்பட உள்ளன.

இதையும் படிக்க | தில்லி தேர்தல்: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களித்தனர்!

தில்லி பேரவைத் தேர்தலில் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.

தில்லியில் உள்ள லேடி இர்வின் பள்ளியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் புதுதில்லி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளருமான அரவிந்த் கேஜரிவால், மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் பெற்றோர்களுடன் வந்து வாக்களித்தார்.

தில்லியின் வளர்ச்சிக்காக தில்லி மக்கள் அனைவரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கேஜரிவால் தெரிவித்தார்.

தில்லி முதல்வர் அதிஷியும் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுடன் பேசுகையில், 'இது உண்மைக்கும் பொய்களுக்குமான தர்மயுத்தம். உண்மை வெல்லும்' என்று கூறினார்.

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தில்லி ஆளுநர் வி.கே.சக்சேனா, ஆம் ஆத்மி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சத்யேந்திர ஜெயினும் வாக்களித்தனர்.

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்... மேலும் பார்க்க

மணிப்பூா் புதிய முதல்வா் யாா்? பாஜக எம்எல்ஏக்களுடன் மாநில பொறுப்பாளா் ஆலோசனை

இம்பால்: மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்த நிலையில் புதிய முதல்வரை தோ்வு செய்வது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் சிலருடன் மணிப்பூா் பாஜக பொறுப்பாளா் சம்பித் பித்ரா ... மேலும் பார்க்க

14 கோடி பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமை பாதிப்பு: சோனியா வலியுறுத்தல்

புது தில்லி: ‘தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதில் இருந்து சுமாா் 14 கோடி தகுதிவாய்ந்த இந்தியா்கள் தடுக்கப்படுகின்றனா். எனவே, மத்திய அரசு விரைந்து மக்கள்தொகை கணக்கெடுப... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு விதிகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கும்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: ‘பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா்கள், துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிமுகம் செய்துள்ள வரைவு வழிகாட்டுதல் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடு... மேலும் பார்க்க

ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தம் 2026 மாா்ச்சுக்குள் நிறைவு: மத்திய அரசு தகவல்

புது தில்லி: நாட்டில் ஸ்மாா்ட் மின் மீட்டா்கள் பொருத்தும் பணிகள் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-க்குள் நிறைவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக... மேலும் பார்க்க

டிரம்பின் முதல் பதவிக் காலத்தைபோல் நட்புறவு மேம்படும்: மோடி நம்பிக்கை

புது தில்லி: ‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் முந்தைய பதவிக் காலத்தில் இரு நாடுகளிடையே நீடித்த நட்புறவை அவரது இரண்டாவது பதவிக் காலத்தில் மேலும் வலுப்படுத்த அமெரிக்க பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்’ என ... மேலும் பார்க்க