செய்திகள் :

``தீபாவளி பண்டிகை நேரத்தில் பாதிப்பை சந்தித்துள்ளோம்..'' - விவசாயிகள் வேதனை!

post image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெய்த மழையால் வயல்களில் தேங்கிய மழை நீரால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நடவு செய்யப்பட்ட பயிர் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளனர். ஒரத்தநாடு அருகே உள்ளது திருமங்கலக்கோட்டை கிராமம். இப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள்

அந்த பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்தநிலையில், தொடர் மழை பெய்தது. இதில் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. வடிகால்கள் முறையாக தூர் வாரவில்லை. இதுவே தண்ணீர் தேங்கி நிற்பதற்கு காரணமானது. தேங்கிய நீரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்தன. இதில் நீரில் மூழ்கிய பயிர் முளைக்கத் தொடங்கி விட்டன. மேலும் பயிர்கள் அழுகின. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திக்க கூடிய நிலைக்கு ஆளாகியிருப்பதாக விவசாயிகள் தரப்பில் வேதனையுடன் கூறி வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "கடந்த ஒரு வாரமாக வயல்களில் தேங்கிய மழை நீர் வடியவில்லை. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் எங்களுக்கு இது போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்

ஒரு ஏக்கருக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்த எங்களுக்கு மழை பாதிப்பை ஏற்படுத்தியதால் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பயிர் மாதிரி எங்க வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு தான் உரிய நிவாரணம் வழங்கி எங்களை காக்க வேண்டும். பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், மனசாட்சியுடன் நடந்து கொள்ளாமல் அதிகாரிகள் போல் நடந்து கொள்கின்றனர்." என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

``காமராஜர் தமிழ் பேரினத்தின் சொத்து!'' -கண்டனங்களுக்குப் பின் வருத்தம் தெரிவித்த திமுக ராஜீவ் காந்தி

திமுக இளைஞரணி அலுவலகத்தில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடந்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக இளைஞரணி தலைவர் ராஜீவ் காந்தி, "ராஜாஜி மூடிய பள்ளிகளைத் தான் காமராஜர் திறந்தார். அவர... மேலும் பார்க்க

TVK மாநாடு ஏற்பாடுகள் Updates | ராஜ கண்ணப்பன் அரசு நிலத்தை அபகரித்தாரா? | MODI | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* "ஓவர் போதையிலிருந்ததால்..." - போலீசை மிரட்டிய நபர்கள்? #ViralVideo* சென்னை: தீபாவளி 18,000 காவலர்கள் பாதுகாப்பு? * "ஸ்டாலினே சுதந்திர தினத் தேதி தெரியாமல் திணறுகிறார்''... மேலும் பார்க்க

ரயில்வே வழங்கும் கம்பளி போர்வைகள் சரியாக சலவை செய்யப்படுகிறதா... RTI-ல் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நாம் ரயிலில் பயணிக்கும்போது இந்திய ரயில்வேத் துறை சார்பாக தூங்குவதற்கான தலையணையும் போர்வையும் வழங்கப்படும். இதை உபயோகிப்பதில் பலருக்கும் எந்த சிக்கலும் இல்லை என்றாலும், சிலர் இவற்றை ஒதுக்கி விட்டு தங்... மேலும் பார்க்க

``கூவத்தூரில் நடந்த கூத்து மக்களுக்குத் தெரியும்!'' - எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

எவ்வளவோ சீனியர்கள் இருக்கும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். தற்போது இதற்கு உதயநிதி பதிலடி கொடுத... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டியது சரியா.. பாதிப்பு வருமா?

Doctor Vikatan: சோஷியல் மீடியா இன்ஃப்ளுயென்சர் இர்ஃபான், தன் குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டிய வீடியோ விட்டது சர்ச்சைக்குள்ளானது. குழந்தை பிறந்ததும் வெட்டி எரிகிற தொப்புள்கொடியை இப்படி... மேலும் பார்க்க

விருதுநகர்: பள்ளிக்காகத் தனியாளாகப் போராடிய மாற்றுத்திறனாளி; மக்கள் திரண்டு ஆதரவு தந்த சுவாரஸ்யம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூர் கிராமப் பகுதியில் வசித்து வருபவர் பார்வை சவாலுடைய மாற்றுத்திறனாளி முகேஷ். இவர் அப்பகுதியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினராகவும், சமூக ஆர்வலராகவு... மேலும் பார்க்க