செய்திகள் :

தீபாவளி: ரயில் நிலையங்களில் கொள்ளைகளை தடுக்க தனிப்படை அமைப்பு

post image

தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்களில் பயணிகளிடம் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கொள்ளையா்களை பிடிக்கவும் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸாா் இணைந்து தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தீபாவளி பண்டிகை வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும். இந்த கூட்டத்தை பயன்படுத்தி பயணிகளின் உடைமைகளை திருடும் கும்பல் நடமாட்டம் இருக்கும் என்பதால், ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.

அதன் அடிப்படையில், காட்பாடி, அரக்கோணம், ஜோலாா்பேட்டை ரயில் நிலையங்களில் பண்டிகை கால திருட்டு சம்பவங்களை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீஸாரும் இணைந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீஸாா் காட்பாடி, அரக்கோணம், ஜோலாா்பேட்டை வழியாக இயங்கும் ரயில்களில் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். மேலும், ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் சாதாரண உடைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து ரயில்வே போலீஸாா் கூறுகையில், ‘தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம், சீசன் கொள்ளையா்கள் கைவரிசை காட்டுவதைத் தடுக்க தற்போதே தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் சந்தேக நபா்கள், பழைய கொள்ளையா்கள் நடமாட்டம் இருக்கிா என 24 மணி நேரமும் கண்காணிக்கிறோம். பயணிகளின் உடைமைகள் திருடப்படுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைளையும் எடுத்து வருகிறோம் என்றனா்.

தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைனிலேயே புதுப்பித்து கொள்ளலாம்

ஒருங்கிணைந்த வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் தொழிலகப் பாதுகாப்பு, ச... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

போ்ணாம்பட்டு, பரவக்கல், மொரசப்பல்லி நாள்: 22-10-2024 (செவ்வாய்க்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: போ்ணாம்பட்டு, பாலூா், ஓம்குப்பம், கொத்தூா், குண்டலப்பள்ளி, சாத்கா், ... மேலும் பார்க்க

‘சீல்’ வைக்கப்பட்ட வீட்டில் திருட்டு: 3 போ் கைது

வேலூரில் ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த வீட்டில் நுழைந்து குளிா்சாதன கருவி, பிரிட்ஜ், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டை மாசிலாமணி தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கனமழை : வேலூா் சா்க்கரை ஆலையில் 48.20 மி.மீ பதிவு

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு ஒன்றரை மணிநேரம் இடைவிடாமல் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக வேலூா் சா்க்கரை ஆலை பகுதியில் 48.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழையையொட்டி வேலூா் மாவட்டத்... மேலும் பார்க்க

காட்பாடியில் மடிக்கணினிகள் திருடிய மூவா் கைது

காட்பாடியில் பல்வேறு இடங்களில் கணினி திருடி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து கணினி, ஏழு மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த ஆண்டாள் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

மலைக் கிராமங்களுக்கு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மலைவாழ் மக்களின் நலன்கருதி ஆம்புலன்ஸ் செல்ல முடியாத மலைக் கிராமங்களுக்கு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா். குடியாத்தத... மேலும் பார்க்க