செய்திகள் :

தீவிர புயலாக கரையைக் கடக்கும் ‘டானா’: வானிலை மையம்

post image

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.20) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இதன் தாக்கத்தால், மத்திய கிழக்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இன்று காலை மாறியது.

இந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று காலை 11.30 மணியளவில் வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தீவிர புயல்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்றும், 23-ஆம் தேதி புயலாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிஸா - மேற்கு வங்க கடற்கரை அருகே 24-ஆம் தேதி காலை அடையும் புயல், மேலும்ம் வலுவடைந்து தீவிரப் புயலாக புரி - சாகர் தீவுகள் இடையே 25-ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கவுள்ளது.

இந்த புயலுக்கு கத்தாா் நாடு பரிந்துரைத்த டானா என்ற பெயரிடப்பட்டுள்ள நிலையில், இது கரையைக் கடக்கும்போது 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் போலீஸ் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுழலில், சுமங்கலி விரத தினமான ‘கர்வா சௌத்’ விரதம் கடைப்பிடிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை (அக். 20), உத்தரப் பிரதேசத்தில் பெண் காவ... மேலும் பார்க்க

மமதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவக் குழு!

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் முதல்வர் மமதா பானர்ஜி இன்று (அக். 21) பேச்சுவார்த்தை நடத்தினார். மாலை 5 மணிக்குத் தொடங்கி சுமார் இரண்டு மணிநேரத்துக்கு இந்த பேச்சுவார்த்தை நடைப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: காங்.,தேர்தல் குழு ஆலோசனை!

மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று (அக். 21) ஆலோசனை மேற்கொண்டது.மகாராஷ்டிரத்துக்கு நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாக... மேலும் பார்க்க

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!

போன்பே நிறுவனத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் கடந்த 5 ஆண்டுகளில் 60 சதவிகித ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்(ஏ.ஐ.) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்... மேலும் பார்க்க

பிரதமர் கல்வித்தகுதி வழக்கு: கேஜரிவாலின் மனு தள்ளுபடி!

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான அவதூறு வழக்கில் கேஜரிவால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரதமரின் கல்வித் தகுதி குறிதது ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர... மேலும் பார்க்க

பாபா சித்திக் கொலை வழக்கு: 4 பேருக்கு அக். 25வரை காவல் நீட்டிப்பு!

பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு அக்டோபர் 25ஆம் தேதிவரை காவல் நீட்டித்து மும்பை உயர்நீதிமன்றம் இன்று (அக். 21) உத்தரவிட்டது. மேலும் பார்க்க