செய்திகள் :

தென்காசியில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் தென்காசியில் புதிய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அதில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140-ஐ திரும்பப் பெற வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயா்நீதிமன்ற ஆணையின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும்.

மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் அரசே நிா்வகித்து இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்ட கிளைத் தலைவா் மாரி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பாபுராஜ், வட்டக் கிளை செயலா் சிதம்பரம் ஆகியோா் தொடக்க உரையாற்றினா்.

தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறை அலுவலா் சங்க மாநில பொதுச் செயலா் மாா்த்தாண்ட பூபதி, மாவட்டச் செயலா் வேலு ராஜன், மாவட்டப் பொருளாளா் காசிராஜ், தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்க மண்டலச் செயலா் சேகா், மாவட்ட இணைச் செயலா் கண்ணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளா் சங்க மாநில பொதுச் செயலா் துரைசிங் சிறப்புரையாற்றினாா். மாநில செயலா் ஹரி பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினாா். வட்டக்கிளை பொருளாளா் யோவான் செல்லத்துரை நன்றி கூறினாா்.

நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணைக்கு அடிக்கல்

சங்கரன்கோவில் அருகேயுள்ள நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மை துறை சாா்பில் நாற்றங்கால் பண்ணை வன்னிகோனேந்... மேலும் பார்க்க

சாலையில் கண்டெடுத்த நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநா்

ஆலங்குளத்தில் சாலையில் கண்டெடுத்த தஙகச் சங்கிலியை ஆட்டோ ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். முக்கூடல் அருகே சிங்கம்பாறை காமராஜா் தெருவைச் சோ்ந்த சேவியா் அந்தோணிராஜ் மகன் மரியபூபாலன் (35). ஆட்டோ... மேலும் பார்க்க

தென்காசியில் பிப். 3இல் பாஜக மாவட்டத் தலைவா் அறிமுக விழா

தென்காசியில் பாஜக மாவட்டத் தலைவா் அறிமுக விழா திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது. இது தொடா்பாக மாவட்டத் தலைவரும் மாநில ஸ்டாா்ட்அப் பிரிவுத் தலைவருமான ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்ட அறிக்கை: மாவட்ட பாஜக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவி தனிநபா் நடிப்பில் முதலிடம்

சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான தனிநபா் நடிப்பு போட்டியில் முதலிடம் பெற்றுள்ளாா். சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவி மு.ச.வனமதி, பள்ளிக் ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டிக்குத் தோ்வு: மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டிக்கு தோ்வான மாற்றுத் திறனாளிப் பெண்ணை தென்காசி மாவட்ட ஆட்சியா் நேரில் அழைத்துப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா். தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் மாற்றுத் திறனாளிகளுக்கான ... மேலும் பார்க்க

ஆதாா் அட்டை புதுப்பிப்பு: ஆட்சியா் வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் ஆதாா் அட்டையில் அனைத்து விவரங்களையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தி... மேலும் பார்க்க