செய்திகள் :

ரசிகர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து: ஹார்திக் பாண்டியா

post image

இந்திய அணியின் வெற்றிக்காக ரன்கள் குவிப்பது மிகவும் சிறப்பான உணர்வைத் தருவதாக ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று (ஜனவரி 31) புணேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. டி20 தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் இந்திய அணி 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, ஹார்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே இருவரும் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். அவர்கள் இருவரும் அரைசதம் விளாசியது இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது.

இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

ரசிகர்கள்தான் என்னுடைய சொத்து

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற நிலையில், பேட்டிங் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: பேட்டிங் எப்போதும் என்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமானது. அதனை நான் மிகவும் நேசிக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்தது மிகுந்த திருப்தியளித்தது. இந்த நாள் மிகவும் திருப்திகரமான நாளாக அமைந்தது.

நான் கிரிக்கெட்டை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன். அது என்னுடைய வாழ்க்கை. அதற்கு நான் எப்போதும் முன்னுரிமை அளிப்பேன். அதுவே என்னுடைய முதல் காதல். இந்த விளையாட்டு எனக்கு நிறைய அன்பினைக் கொடுத்துள்ளது. இந்த விளையாட்டுக்கு மிகவும் நேர்மையாகவும், விஸ்வாசமாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.

இதையும் படிக்க: விராட் கோலியை கௌரவித்த தில்லி கிரிக்கெட் சங்கம்; எதற்காக?

நான் எப்போதும் ரசிகர்களுக்காகவே விளையாடுகிறேன். ரசிகர்கள் மைதானத்தில் இருந்து உற்சாகமளிக்கும்போது, அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது. அதே நேரத்தில், ரசிகர்களுக்காகவும் நான் சிறப்பாக விளையாட வேண்டும் எனவும் நினைக்கிறேன். டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு நிறைய விஷயங்கள் மாறிவிட்டது. ரசிகர்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் மதிப்புமிக்கதாக இருக்க, சிறப்பாக விளையாடி அவர்களை மகிழ்விக்க விரும்புகிறேன் என்றார்.

நேற்றையப் போட்டியில் ஹார்திக் பாண்டியா 30 பந்துகளில் 53 ரன்கள் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அபாரம்: முதல் முறையாக முழுமையாக வெல்லப்பட்ட மகளிர் ஆஷஸ் தொடர்!

மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆஷஸ் கிரிக்கெட் தொடர் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வந்த மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவடை... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நட... மேலும் பார்க்க

ஏமாற்றி வென்றதா இந்திய அணி? பட்லர் அதிருப்தி!

இந்திய வீரர் ஷிவம் துபேவுக்கு மாற்று வீரராக ஹர்ஷித் ராணாவை களமிறக்கியதற்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்ட... மேலும் பார்க்க

விராட் கோலியை கௌரவித்த தில்லி கிரிக்கெட் சங்கம்; எதற்காக?

இந்திய அணியின் விராட் கோலியை தில்லி கிரிக்கெட் சங்கம் கௌரவித்துள்ளது.இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி தற்போது தில்லி அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார். ரயில்வே... மேலும் பார்க்க

ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே அதிரடி: இங்கிலாந்துக்கு 182 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணேவில் இன்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

சாம்பியன்ஸ் டிராபிக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 31) அறிவித்துள்ளது.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது... மேலும் பார்க்க