செய்திகள் :

முதல் டெஸ்ட்: இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

post image

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 654 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 232 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்களும், ஜோஷ் இங்லிஷ் 102 ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிக்க: விராட் கோலியை கௌரவித்த தில்லி கிரிக்கெட் சங்கம்; எதற்காக?

இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் ஜெஃப்ரி வாண்டர்சே தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

165 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 654 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் தினேஷ் சண்டிமால் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 22 ரன்களும், குசல் மெண்டிஸ் 21 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் மேட் குன்ஹிமேன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா அபார வெற்றி

165 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆன இலங்கை அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியில் ஜெஃப்ரி வாண்டர்சே அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஏஞ்சலோ மேத்யூஸ் 41 ரன்களும், கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 39 ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிக்க: மகளிர் டி20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா!

ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் மற்றும் மேட் குன்ஹிமேன் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க் மற்றும் டோட் முர்பி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கவாஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா அபாரம்: முதல் முறையாக முழுமையாக வெல்லப்பட்ட மகளிர் ஆஷஸ் தொடர்!

மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆஷஸ் கிரிக்கெட் தொடர் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வந்த மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவடை... மேலும் பார்க்க

ரசிகர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து: ஹார்திக் பாண்டியா

இந்திய அணியின் வெற்றிக்காக ரன்கள் குவிப்பது மிகவும் சிறப்பான உணர்வைத் தருவதாக ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று (ஜனவரி 31) புண... மேலும் பார்க்க

ஏமாற்றி வென்றதா இந்திய அணி? பட்லர் அதிருப்தி!

இந்திய வீரர் ஷிவம் துபேவுக்கு மாற்று வீரராக ஹர்ஷித் ராணாவை களமிறக்கியதற்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்ட... மேலும் பார்க்க

விராட் கோலியை கௌரவித்த தில்லி கிரிக்கெட் சங்கம்; எதற்காக?

இந்திய அணியின் விராட் கோலியை தில்லி கிரிக்கெட் சங்கம் கௌரவித்துள்ளது.இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி தற்போது தில்லி அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார். ரயில்வே... மேலும் பார்க்க

ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே அதிரடி: இங்கிலாந்துக்கு 182 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணேவில் இன்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

சாம்பியன்ஸ் டிராபிக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 31) அறிவித்துள்ளது.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது... மேலும் பார்க்க