செய்திகள் :

ஏமாற்றி வென்றதா இந்திய அணி? பட்லர் அதிருப்தி!

post image

இந்திய வீரர் ஷிவம் துபேவுக்கு மாற்று வீரராக ஹர்ஷித் ராணாவை களமிறக்கியதற்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி புணே மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்த நிலையில், துபேவுக்கு மாற்று வீரராக ராணா களமிறக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

துபேவுக்கு பதிலாக களமிறங்கிய ராணா

இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 181 ரன்கள் குவித்தது. அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் திணறிய நிலையில், ஹர்திக் பாண்டியா, துபே, ரிங்கு சிங் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இந்த போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று அதிரடியாக விளையாடிய துபே, 53 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் ஓவர்டன் வீசிய பந்து துபேவில் தலைக்கவசத்தில் பலமாக தாக்கியது.

இதில், துபேவுக்கு தலையில் லேசான வலி ஏற்பட்டதால் மாற்று வீரராக ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டார்.

இது ஐசிசி விதிகளுக்கு மாறாக இருப்பதாக இணையத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. ராமந்தீப் சிங் அணியில் இருக்கும்போது துபேவைவிட அதிக வேகத்துடன் பந்து வீசக் கூடிய ராணா சேர்க்கப்பட்டது சர்ச்சையானது.

ஐசிசி விதிப்படி, ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால், அவரின் திறன் கொண்ட மாற்று வீரரை மட்டுமே களத்தில் இறக்க வேண்டும். பேட்டர் என்றால் பேட்டர், சுழற்பந்து வீச்சாளர் என்றால் சுழற்பந்து வீச்சாளர்.

இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ராணா, 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பட்லர் அதிருப்தி

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களுடன் பட்லர் பேசியதாவது:

”இணையான மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை. ஒன்று துபே 25 மைல் வேகத்தில் பந்து வீசுபவராக இருக்க வேண்டும் அல்லது ராணா சிறப்பான பேட்டராக இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் இணையான மாற்று வீரராக கருத முடியும்.

இதுகுறித்து என்னிடம் எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

நான் பேட்டிங் பிடிக்க வந்தபோது யாருக்கு பதிலாக ராணா என்ற குழப்பம் நீடித்தது. பிறகுதான் துபேவுக்கு பதிலாக களமிறக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தனர். நான் நடுவரிடம் முறையிட்டபோது, போட்டி நடுவர் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்துவிட்டனர். அதன்பிறகு பேசுவதற்கான வாய்ப்பில்லாமல் போனது.

இது ஆட்டத்தில் ஒரு பகுதி என்றாலும், போட்டி நடுவரிடம் முறையிட்டு முறையான விளக்கத்தை பெறுவோம்” எனத் தெரிவித்தார்.

விராட் கோலியை கௌரவித்த தில்லி கிரிக்கெட் சங்கம்; எதற்காக?

இந்திய அணியின் விராட் கோலியை தில்லி கிரிக்கெட் சங்கம் கௌரவித்துள்ளது.இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி தற்போது தில்லி அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார். ரயில்வே... மேலும் பார்க்க

ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே அதிரடி: இங்கிலாந்துக்கு 182 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணேவில் இன்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

சாம்பியன்ஸ் டிராபிக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 31) அறிவித்துள்ளது.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது... மேலும் பார்க்க

4-வது டி20: இந்தியா பேட்டிங்; ஷிவம் துபே அணியில் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணேவில் இன்று (ஜனவரி 31) நடைபெ... மேலும் பார்க்க

சதம் விளாசிய அன்னாபெல் சதர்லேண்ட்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 31) மெல்போர்னில் தொடங்கியது. இந்தப் போட்டி... மேலும் பார்க்க

சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை இந்த வி... மேலும் பார்க்க