செய்திகள் :

பாஜக ஆதரவாளர்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள்: அரவிந்த் கேஜரிவால்!

post image

தில்லி அரசின் நலத்திட்டங்களைப் பாதுகாக்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆதரவாளர்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கைவிடுத்துள்ளார்.

தலைநகர் தில்லியில் வருகின்ற பிப்.5 அன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருவதால் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தில்லியின் தற்போதைய ஆளுங்கட்சியான ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தனது அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் பாதுகாக்கப்பட்டு தொடர இம்முறை ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என பாஜக ஆதரவாளர்களிடம் இன்று (பிப்.1) கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: இந்தியாவில் பொம்மைகள் தயாரிக்க சிறப்பு திட்டம்!

இதுகுறித்து அவர் கூறியதாவது, பாஜக ஆளும் மாநிலங்களை விட தில்லியிலுள்ள அரசுப் பள்ளிகளின் கல்வி தரம் உயர்ந்துள்ளதாகவும், ஆம் ஆத்மி தோல்வியடைந்து தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மக்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், இலவச குடிநீர், இலவச மருத்துவ வசதி, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரமான கல்வி ஆகியவை ரத்து செய்யப்பட்டு மக்களுக்கு ரூ.25,000 வரை இழப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாஜகவை விட்டு விலகுவது உங்களது விருப்பம் ஆனால் நலத் திட்டங்களை பாதுகாக்க ஆம் ஆத்மிக்கு இம்முறை வாக்களியுங்கள் என பாஜக ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் எந்தவொரு திட்டமும் ரத்து செய்யப்படாமல் தொடரும் என உறுதியளித்துள்ளனர்.

சட்டவிரோதமாக குடியேறிய 18 வங்கதேசத்தினர் நாடு கடத்தல்!

புது தில்லியில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 18 வங்கதேசத்தினர் இன்று (பிப்.1) அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும், 3 வங்கதேசத்தினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் ... மேலும் பார்க்க

கருணை கொலைக்கு அனுமதி: உச்சநீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு: கண்ணியத்துடன் இறக்க நோயாளியை அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை அமல்படுத்த கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சா் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தாா்.இது குறி... மேலும் பார்க்க

‘ஸ்டாா்ட்அப்’ நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு

புது தில்லி : ‘ஸ்டாா்ட்அப் (புத்தாக்கத் தொழில்) நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட... மேலும் பார்க்க

விடாமுயற்சி: ‘சவதீகா ரீலோடட்’ பாடல் விடியோ வெளியானது!

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின் ’சவதீகா’ பாடலின் ரீலோடட் வெர்ஷன் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் ஆக்‌ஷன் கதைக்களத்துடன் உருவ... மேலும் பார்க்க

வெனிசுலா: 6 அமெரிக்கர்கள் விடுதலை!

அமெரிக்க அதிபர் டிரம்பின் தூதர் வெனிசுலா அதிபர் மதுரோவை சந்தித்து பேசிய பின்னர் அந்நாட்டில் சிறைப் பிடிக்கப்பட்டிருந்த 6 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெனிசுலாவி... மேலும் பார்க்க

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா காலமானார்

புதுதில்லி: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா(79) சனிக்கிழமை காலமானார் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி இதனை தெரிவித்துள்ளார். சாவ்லா மூளை அறுவை சிகிச்சைக்காக தில்லியில... மேலும் பார்க்க