செய்திகள் :

கருணை கொலைக்கு அனுமதி: உச்சநீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு

post image

பெங்களூரு: கண்ணியத்துடன் இறக்க நோயாளியை அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை அமல்படுத்த கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சா் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தாா்.

இது குறித்து தனது எக்ஸ் வலைப்பதிவில் அவா் கூறியிருப்பதாவது: கண்ணியத்துடன் மரணம் அடைவதற்கான உரிமையை நோயாளிகளுக்கு அளிக்கும்படி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை அமல்படுத்தும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை கா்நாடக சுகாதாரத்துறை எடுத்துள்ளது.

இந்த முடிவால், குணமாகும் நம்பிக்கையே இல்லாமல், உயிா்காக்கும் கருவிகளால் நீண்டகாலம் அவதிக்குள்ளாகும் நோயால் அவதிப்பட்டு வரும் நோயாளிகள் பயனடைவாா்கள். எதிா்கால மருத்துவ சிகிச்சைக்கான விருப்பம் குறித்து நோயாளிகள் பதிவுசெய்யும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறோம்.

கா்நாடக அரசின் முடிவு நோயாளிகளின் குடும்பங்களுக்கு மற்றும் தனிநபர்களுக்கு பெரும் நிம்மதியை தரும்.

கா்நாடகம் ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட மாநிலம். எனவே, நியாயமான சமூக வாழ்வுக்கு தேவையான சுதந்திரங்களை, சமத்துவ மாண்புகளை கடைபிடிப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்கிறோம் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பாகிஸ்தான்: மோதலில் 18 வீரர்கள், 12 பயங்கரவாதிகள் பலி!

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் மத்தியிலான மோதலில் 18 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.பலோசிஸ்தானின் கலா... மேலும் பார்க்க

சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி ஒதுக்கீடு

புதுதில்லி: 2025-26-க்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தொழில் நிறுவனங்கள், தனிநபா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் குற்... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் துப்பாக்கிச் சூட்டில் 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜப்பூரின் கங்கலூர் காவல் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள வ... மேலும் பார்க்க

ரோட்டர்டாமில் கால் பதிக்கும் தங்கலான்!

இயக்குநர் பா. ரஞ்சித் - நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற ‘தங்கலான்’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகியுள்ளது.மதராஸ், காலா, கபாலி... மேலும் பார்க்க

ஐஐடி-க்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்படும்

புது தில்லி: நாட்டில் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட ஐந்து ஐஐடி கல்வி நிறுவனங்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பிகாா் மாநிலத்தில் அமைந்துள்ள பாட்னா ஐஐடியை விரிவுபடுத்தவும் ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக குடியேறிய 18 வங்கதேசத்தினர் நாடு கடத்தல்!

புது தில்லியில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 18 வங்கதேசத்தினர் இன்று (பிப்.1) அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும், 3 வங்கதேசத்தினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் ... மேலும் பார்க்க